கூந்தல் இயற்கையான கருமை நிறத்தை பெற

black long hair
- Advertisement -

ஒருவர் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் அவரின் தலை முடி கருமையாக இல்லாமல் வெள்ளையாக இருந்தால் அவரை முதியவர் என்ற இடத்திற்கு தள்ளி விடுவார். அந்த அளவிற்கு நரைமுடி செயல்படுகிறது. இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே பலருக்கும் இந்த நரை முடி பிரச்சனை என்பது வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு விரைவிலேயே முழு வெள்ளையாக மாறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதாலேயே அதற்கு பயந்து கொண்டே கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனால் தலைமுடியில் பாதிப்புகள் தான் ஏற்படுமே தவிர்த்து முடி தன்னுடைய பழைய நிலைக்கு போக முடியாது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையான முடியின் நிறத்தை மீண்டும் பெறுவதற்கு எந்த எண்ணெயுடன் எந்த பொருளை சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

இழந்த முடியையும் நிறத்தையும் முடியின் ஆரோக்கியத்தையும் பெறுவதற்காகவே நமக்கு பல மூலிகை பொருட்கள் திகழ்கின்றன. இந்த மூலிகை பொருட்களை பயன்படுத்தி நாம் எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்தினால் கண்டிப்பாக முறையில் நம்முடைய இழத்த முடியை நம்மால் திரும்ப பெற முடியும். ஆனால் எண்ணையை தயாரிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

- Advertisement -

ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு விதமான பதம் இருக்கிறது. அந்த பதத்தை பொறுத்து எண்ணெயில் நாம் சூடு செய்தால்தான் அந்த மூலிகையின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். இதை அனைத்தையும் உணராமல் தாங்களே தங்களுக்கு தெரிந்த மூலிகைகளை போட்டு எண்ணெய் தயார் செய்து தலைக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இப்படி இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு எதையும் செய்யாமல் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கக்கூடிய ஒரு எண்ணையைப் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்.

அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகளிலும் நீலி பிரிங்காதி தைலம் விற்கும். இதில் அவுரி மற்றும் கரிசலாங்கண்ணி மூலிகை கலந்திருக்கிறது. இந்த எண்ணெயை மட்டுமே நாம் பயன்படுத்தினாலே நம்முடைய முடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த எண்ணெய் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த எண்ணெயுடன் நாம் ஒரே ஒரு பொடியை மட்டும் கலந்து தேய்த்தால் போதும்.

- Advertisement -

100 ml நீலி பிரிங்காதி தைலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இதை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஊற்றி லேசாக சூடானதும் இதில் ஒரே ஒரு ஸ்பூன் அளவிற்கு திரிபலா பொடி மட்டும் சேர்க்க வேண்டும். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்ததும் குறைந்த தீயில் பத்து நிமிடமாவது கொதிக்க விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எண்ணையின் நிறம் முற்றிலும் கருமையாக மாறிவிடும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த எண்ணெயை தினமும் நம்முடைய தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு கெமிக்கல் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடலாம். மிகவும் எளிதில் அதேசமயம் சுலபமாக செய்யக்கூடிய இந்த எண்ணையை தயார் செய்து நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி இயற்கையான கருமை நிறத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கரும்புள்ளிகள் மறைய அழகு குறிப்பு

மிகவும் சிரமப்பட்டு செய்யாமல் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களையும் உபயோகப்படுத்தி நம்முடைய இயற்கையான ஆரோக்கியமான கருமையான கூந்தலை பெறுவோம்.

- Advertisement -