அன்னபூரணி சிலையை இப்படி வைத்தால், வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. அன்னபூரணி சிலை, திருவுருவப்படம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

annapoorani-food
- Advertisement -

மனிதப் பிறவி எடுத்த பிறகு இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு. நமக்கு இருக்கும் அரை ஜான் வயிற்றுக்காக தான். மூன்று வேலை பசிக்கவில்லை, மூன்று வேலை சாப்பாடு தேவை இல்லை என்றால் இந்த உலகம் இயங்குவதில் ஒரு அர்த்தமே கிடையாது. இதைத் தாண்டி பொன் பொருள் வீடு இவை எல்லாம் நம்முடைய அடுத்தடுத்த தேவைகளுக்கு தான். முதன்மையாக நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு தேவை அன்னம், சாப்பாடு. அது எந்த வகையான சாப்பாடாக இருந்தாலும் சரி, உணவுப் பொருளுக்கு தெய்வம் என்றால் அவள் அன்னபூரணி. நமக்கு சோறு போடும் தெய்வம். நம் இந்து சாஸ்திரம் படி நமக்கு சோறு போடும் தெய்வமான இந்த அன்னபூரணி தாயைப் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில ஆன்மீகம் சார்ந்த குறிப்புகள் இதோ உங்களுக்கா.

அன்னபூரணி தாயை வழிபாடு செய்யும் முறை:
நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அசைவ சாப்பாட்டிற்கும் கடவுள் இந்த அன்னபூரணி தாய் தானே. ஆகவே உங்களுடைய வீட்டிலும் அன்னபூரணியை வைத்து வழிபாடு செய்யலாம். அன்னபூரணி தாயின் சிலை அல்லது திருவுருவப்படம் எதை வைத்து வழிபாடு செய்தாலும் நல்லது. அன்னபூரணி சிலையாக இருந்தால் அதை சில பேர் பூஜை அறையில் வைத்திருப்பார்கள். சில பேர் சமையல் அறையில் வைத்திருப்பார்கள். அசைவம் சமைக்க கூடிய இடத்தில் சுவாமி படத்தை வைத்து வழிபாடு செய்வது நம்முடைய மனது ஏற்றுக் கொள்ளாது. ஆகவே நீங்கள் அசைவம் சமைப்பவர்களாக இருந்தால் அன்னபூரணி சிலையை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

சைவம் மட்டும் சமைப்பவர்கள் அன்னபூரணி சுவாமியை சமையலறையிலேயே வைக்கலாம். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்கள் வரும்போது மட்டும், நீங்கள் அந்த அன்னபூரணி சிலையை சமையலறைக்கு சென்றாலும் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் வீட்டில் சமையல் அறையும் பூஜை அறையும் ஒன்றாக இருக்கும். அப்போது எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் பூஜை அறையில் இந்த அன்னபூரணி தாயை வைத்து வழிபட்டுக் கொள்ளலாம். எந்த தவறும் கிடையாது. அசைவம் சமைக்கும் போது சுவாமி அறைக்கு திரை போட்டு விட வேண்டும்.

அன்னபூரணி தாயின் சிலையை வைக்கும் சரியான முறை:
சிலையை நீங்கள் பூஜை அறையில் வைத்திருந்தாலும் சரி, சமையல் அறையில் வைத்திருந்தாலும் சரி, அன்னபூரணியை எப்போதும் பச்சரிசியின் மேல் அல்லது பச்சரிசி நெல்லின் மேல் அமர வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு பித்தளை கிண்ணம், பித்தளை டம்ளர் எதுவாக இருந்தாலும் அது நிரம்ப பச்சரிசி அல்லது நெல் கொட்டி அதன் உள்ளே அன்னபூரணியின் சிலையை அமர வைக்க வேண்டும்.

- Advertisement -

அன்னபூரணியின் சிலை அரை இன்சோ, ஒரு இஞ்சோ அந்த நெல்லில் புதைந்திருக்கும் படி வைக்க வேண்டும். இந்த பச்சரிசியில் நான்கு துவரம் பருப்பு, 2 ஏலக்காய், 2 கிராம்பு, போட்டு வைப்பது மிக மிக சிறப்பு. முடிந்தால் இதில் ஒரு வெள்ளி நாணயம் வைக்கலாம். இல்லை என்றால் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.

அன்னபூரணியின் சிலை இருந்தால் தினமும் உங்களுடைய வீட்டில் சமைத்த பிறகு, நீங்கள் சமைத்த உணவை இந்த அன்னபூரணி தாயின் சிலைக்கு நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் சரியான முறை. கூடவே ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை வைத்து வணங்க வேண்டும். இப்படி முறையாக அன்னபூரணி தாயை எவர் வீட்டில் வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுடைய வீட்டில் சாப்பாட்டுக்கு பிரச்சனையே இருக்காது.

இதையும் படிக்கலாமே: அள்ள அள்ள குறையாத செல்வ வளத்தை பெற வேண்டுமென்றால் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிறத்தை இப்படி பாருங்க.

சமைத்த சாப்பாடு வீணாகாது. வீட்டில் இருப்பவர்கள் நோய் வாய்வு பட்டு, அந்த சாப்பாட்டை கை வைக்க முடியவில்லை என்ற தரித்திரம் ஒருபோதும் பிடிக்காது. வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக எல்லா உணவையும் சாப்பிடும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை அந்த அன்னபூரணி தாய் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பாள். அன்ன தோஷம், அன்ன தரித்திரம் விலக இந்த அன்னபூரணி தாயை மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்து வாருங்கள். நிச்சயம் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -