அள்ள அள்ள குறையாத செல்வ வளத்தை பெற வேண்டுமென்றால் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிறத்தை இப்படி பாருங்க.

wake-up-lakshmi
- Advertisement -

இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் முதலாவதாக இருப்பது பணத்தடை. பணம் வருவதில் நிறைய தடைகள். அதை உடைத்தெறிய நாம் செய்ய வேண்டிய எளிமையான சில விஷயங்களை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இதை பரிகாரம் என்று நினைத்து செய்தாலும் சரி, அல்லது சுறுசுறுப்பாக இருப்பதற்காக இந்த வேலைகளை செய்தாலும் சரி, உங்களுக்கு இருக்கும் பணத்தடைகள் உடையும்.

உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஊக்குவிக்கப்படும். உடம்பில் ஒரு துளி சோம்பேறித்தனம் கூட இல்லாமல் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு, புத்துணர்ச்சையோடு வேலை செய்து, புத்துணர்ச்சியோடு பணம் சம்பாதிக்க ஆன்மீகம் சார்ந்த ஒரு வழி உங்களுக்காக இதோ.

- Advertisement -

பணத்தடை உடைய சூரிய நமஸ்காரம்:
இந்த பரிகாரத்தை செய்ய முதலில் நீங்கள் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்து விட வேண்டும். பொதுவாகவே சூரியன் உதயமாகும் போது ஆரஞ்சு நிறத்தில் உதயம் தெரியும் அல்லவா. அதற்கு முன்பாகவே நீங்கள் சூரியனை தரிசனம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு முன்பு குளித்துவிட்டு, சூரியனைக் காண்பதற்கு தயாராக வீட்டிலிருந்து வெளியே வந்து விடுங்கள். உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் நின்றால் சூரிய பகவான் உதயமாக கூடிய அந்த ஆரஞ்சு நிற சூரியன் தெரியுமோ, அந்த இடத்தில் நின்று, அந்த சூரிய உதயத்தை பார்க்க வேண்டும்.

- Advertisement -

அந்த ஆரஞ்சு நிற சூரிய பகவானை 2 நிமிடம் பார்த்து, உங்களுக்கு இருக்கும் பணத்தடை உடைய வேண்டும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். இந்த நாள் வீணாக செல்லக்கூடாது, என்று உங்களுடைய வேலைக்காக நீங்கள் வேண்டுதல் வைத்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய அன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய சூரிய பகவானிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறீர்கள்.

நீங்கள் கடை வைத்திருப்பவர்கள் ஆக இருந்தால், அந்த கடையில் வியாபாரம் சிறக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், செய்யும் வேலையில் முன்னேற்றம் ஏற்பட, சம்பள உயர்வு ஏற்பட இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இந்த பரிகாரம் கை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வீட்டு வேலையை சுறுசுறுப்பாக செய்ய, சமையலை சிறப்பாக செய்ய கூட இந்த பரிகாரம் கைகொடுக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலும் மேலும் முன்னேற்றம் பெற வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இப்படியாக நாம் செய்யக்கூடிய வேலைகள் எல்லாம் சிறப்பாக செழிப்பாக நடைபெறும் பட்சத்தில், நமக்கு வரக்கூடிய வருமானமும் பெருகும். பணத்தடையும் இருக்காது. சுலபமாக நம் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும். பிறகு சந்தோஷமான வாழ்க்கை தானே. எந்த இடத்தில் சோம்பேறித்தனம் தகர்க்கப்படுகிறதோ, அந்த இடத்தில் பணத்தடையும் நிச்சயம் இருக்காது. இதுதான் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன ரகசியம்.

இதையும் படிக்கலாமே: மலை போல் செல்வம் கூவிய வேண்டுமென்றால் இந்த குபேரரை வைத்து தான் வணங்க வேண்டுமாம், குபேரரை பற்றி இது வரை தெரியாத அதிசய தகவல்கள்.

சோம்பேறித்தனம் இல்லாமல் எறும்பு போல சுறுசுறுப்பாக செயல்படுங்கள். தினமும் இந்த சூரிய பகவானை தரிசனம் செய்ய காலையில் எழுந்தரியுங்கள். வாழ்க்கையிலும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -