ஏப்ரல் மாத ராசி பலன்கள் – 12 ராசிக்காரர்களுக்குமான துல்லிய கணிப்பு!

- Advertisement -

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு விதமான பலன்கள் அந்தந்த கிரக நிலைகளின் அடிப்படையில் கிடைக்கும். சென்ற மாதம் தடைப்பட்ட காரியம் இந்த மாதத்தில் முடிவடைய கூடிய வாய்ப்புகள் அமையும். கிடைக்கின்ற வாய்ப்புகளையும், கிடைக்கின்ற அதிர்ஷ்டங்களையும் பயன்படுத்திக் கொள்வது ராசிபலனை குறிக்கிறது. அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை விட நல்ல பலன்களை காண இருக்கிறீர்கள். பொருளாதார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் விருத்தி காணும் யோகம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை சாதக பலன் உண்டு. பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். இம்மாதம் முருகனை வழிபட முடியாததும் முடியும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட பலன்கள் கொடுக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் குடும்ப தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள், புதிய மனிதர்களின் நட்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்த முயல்வது நல்லது. ஆரோக்கியம் மெல்லமெல்ல முன்னுக்கு வரும். பரிகாரத்திற்கு இம்மாதம் விநாயகரை வழிபடுங்கள் வெற்றி உண்டு.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பலன்கள் உண்டு என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நடக்குமா? நடக்காதா? என்று யோசிப்பதை விட நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் இம்மாதம் வசூலாகிவிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வரக்கூடிய வருமானத்தைவிட செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு புதிய புரிதல் ஏற்படும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பரிகாரத்திற்கு இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்கை வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே நட்பு மலரும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும் என்பதால் சாதுரியமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பரிகாரத்திற்கு திங்கட்கிழமை தோறும் சிவனுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுங்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் செலுத்துங்கள். பங்குதாரர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. பேச்சில் இனிமை இல்லை எனில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் நிகழும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு குறைகள் நீங்கும். பரிகாரத்திற்கு இம்மாதம் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. வருமானத்திற்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகள் துவங்குவதற்கு உரிய மாதமாக இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதி சார்ந்த நெருக்கடிகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வம்பு வழக்குகளில் தேவையில்லாமல் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. பெண்களின் கை ஓங்கி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பரிகாரத்திற்கு வேங்கடவனை சனிக்கிழமையில் துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரிய முயற்சிகளுக்கு தடை, தாமதங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். வெளிநாடு, வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் சாதக பலன் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் முன்னேற்றம் நிச்சயம். வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் சூழ்நிலையை அறிந்து கொண்டு பேசுவது நல்லது. வீண் பழி சுமக்க நேரிடும் என்பதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. ஆரோக்கியம் வலுபெற வாய்ப்புகள் அமையும். பரிகாரத்திற்கு புதன் கிழமையில் புதன் பகவான் வழிபாடு செய்து வாருங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. புதிய முயற்சிகளுக்கு, முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறந்த மாதமாக இருக்கும். அரசு வழி காரியங்கள் தாமதப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அறிவுத் திறனுக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அலட்சியத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் லட்சிய பாதையை நோக்கி பயணம் செய்வார்கள். புதிதாக செய்யக்கூடிய முதலீடுகளுக்கு நல்ல லாபம் காணும் யோகம் உண்டு. வம்பு, வழக்குகளில் சாதகமான முடிவுகள் வரும். மாத பிற்பகுதியில் வேகத்துடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். பரிகாரத்திற்கு வெள்ளிக்கிழமையில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வாருங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற, இறக்கத்துடன் கூடிய மாதமாக அமைய இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் முன்கூட்டியே கணிப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சனையில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கடின உழைப்பு, ஓய்வில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மனம் தளராத முயற்சி இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் ஆர்வத்தத்துடன் இருப்பார்கள். உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பரிகாரத்திற்கு வியாழன் குரு வழிபாடு செய்வது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் அற்புதமான மாதமாக அமைந்திருக்கிறது. உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய வெற்றி கிடைக்கும். கிரக மாற்றங்களால் கெடுபலன்கள் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்று கூறும் அளவிற்கு நிலைமை இருக்கும். வாகன ரீதியான பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் செல்லுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறும் யோகமுண்டு. உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கு எண்ணற்ற விமர்சனங்களைக் கடந்து வரவேண்டி இருக்கும். பரிகாரத்திற்கு வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு தயிர்சாதம் படையுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து நடந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரித்தாலும், போட்டிகள் வலுவாகும் என்பதால் விடா முயற்சி தேவை. புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடங்களில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பேச்சில் இனிமை இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளுடைய கல்வி விஷயத்தில் அக்கறை கொள்ளுங்கள். புதிய சேமிப்பை துவங்குவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரிகாரத்திற்கு சூரிய நமஸ்காரம் செய்து வருவது நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முக்கியமான பல நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் அடிக்கடி டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பதராத காரியம் சிதறாது என்பது போல பெண்கள் பல சமயங்களில் நாசூக்காக நடந்து கொள்வீர்கள். வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகி விடுவீர்கள். பிள்ளைகள் கவனம் சிதறாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பரிகாரத்திற்கு எருக்கம்பூ மாலை சாற்றி விநாயகரை வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -