தினமும் இதை நெற்றியில் இட்டு வந்தால் போதும். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறி நமக்குள் வந்துவிடும். மனதில் நினைத்ததை அடைந்தே தீருவார்கள்.

thilagam
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தை நோக்கி அந்த இலக்கை நோக்கித்தான் வாழ்க்கையின் பயணம் தொடர்கின்றது. ஆனால் சில பேருக்கு இருக்கக்கூடிய லட்சியம் சீக்கிரத்திலேயே நிறைவேறிவிடும். சில பேருடைய லட்சியம் நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கத்தான் செய்யும். இலக்கை நோக்கி செல்லும்போது தோல்விகள் இருப்பினும் விடாமுயற்சியோடு லட்சியத்தை நோக்கி சென்றால் அவரவர் லட்சியத்தில் நிச்சயமாக ஜெயிக்க முடியும். அதில் எந்த ஒரு மாற்றமோ சந்தேகமோ கிடையவே கிடையாது.

வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்றால், குறிக்கோளில் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில் நமக்கு தேவையான ஒரு விஷயம் ‘தெளிவு’. குழம்பிய குட்டையாக இருந்தாலும் கூட அதிலிருந்து நம்மால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியாது. தெளிந்த தண்ணீரில் சுலபமாக மீனைப் பிடித்து விடலாம். நம்முடைய வாழ்க்கையும் இதேபோல்தான். குழப்பமில்லாத தெளிவான மனநிலை எவரிடத்தில் இருக்கிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட தெளிவான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் எடுக்கக்கூடிய முடிவும் அவர்களுக்கு சாதகமாக அமையும்.

- Advertisement -

குழப்பங்கள் நிறைந்த மனசஞ்சலங்கள் நிறைந்த ஒரு மனிதனால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவே முடியாது. நினைத்த குறிக்கோளையும் நெருங்க முடியாது. நம்முடைய மனதை நாம் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். ஆன்மீக ரீதியாக நம்முடைய மனதில் இருக்கும் குழப்பங்களை வெளியேற்ற, நம்முடைய மனதை தெளிவுபடுத்திக் கொள்ள, நினைத்ததை சாதிக்க தேவையான தெம்பை பெற நாம் நெற்றியில் தினம்தோறும் இந்த திலகத்தை இட்டுக் கொண்டாலே போதும். அது எந்த திலகம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

aragaja

இதற்கு முக்கியமாக நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு பொருள் அரகஜா. இன்றைய காலகட்டத்தில் அரகஜா சுலபமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கின்றது. இந்த அரகஜாவை அந்த காலத்தில் கடவுளின் கண்களை திறப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வந்தார்கள். இந்த பொருள் அனைவரின் கையிலும் அவ்வளவு சுலபமாக கிடைக்காது. இப்போது நமக்கெல்லாம் இந்த அரகஜா சுலபமாக கிடைப்பது என்பதே ஒரு பாக்கியம் தான்.

- Advertisement -

கடவுளின் கண்ணை திறக்க பயன்படுத்தும் இந்த பொருள் நம்முடைய மனதையும் தெளிவுபடுத்தக் கூடிய சக்தி கொண்ட பொருளாக சொல்லப்பட்டுள்ளது. அரகஜா ஒரு டப்பாவை வாங்கிக்கொள்ளுங்கள். சிவப்பு சந்தனம் சிறிதளவு, தர்ப்பைப் புல். இந்த 3 பொருட்கள் தான் நமக்கு தேவை.

அகல் விளக்கில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி அந்த தீபத்தின் ஒளி சுடரில் 3 தர்ப்பைப் புல்லை காண்பித்து பொசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் அரகஜா, சிவப்பு சந்தனம் தர்ப்பைப் புல்லை எரித்த சாம்பல் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.

tharpai-1

இந்த திலகத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தாலே போதும். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை வேண்டி நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய மனது தேவையற்ற குழப்பங்களிலிருந்து வெளிவந்துவிடும். சீரான சிந்தனை, தெளிவாக முடிவு எடுக்கும் திறமை, குழப்பங்கள் இல்லாத மனது, எதையும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம், நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் இவை அனைத்தும் உங்களிடத்தில் வந்துவிடும். பிறகு வாழ்க்கையில் காரியத்தடை என்பதே இருக்காது. உங்கள் குறிக்கோளை நோக்கி வெற்றிப் பாதையில் செல்ல வேண்டியது தான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்ற பலனடையலாம்.

- Advertisement -