அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்

govt job
- Advertisement -

ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காதவர்களாக இருந்தாலும் சரி வருமானம் ஏற்படுவதற்குரிய ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பாதி விஷயத்தை கடந்து விடலாம். அப்படி கிடைக்கும் வேலை அரசாங்க வேலையாக இருந்தால் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய வருமானத்திற்கு எந்தவித குறையும் இருக்காது. அப்படிப்பட்ட அரசாங்க வேலை கிடைப்பதற்காக பலரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த முயற்சிகளில் வெற்றி அடைய ஆரஞ்சு பழத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. சூரிய பகவானின் அருள் மட்டும் அல்லாமல் செவ்வாய், சனி மற்றும் குரு இவர்களின் அருளும் கிடைத்தால் தான் அவர்களால் அரசாங்க வேலையில் சேர முடியும். ஒருவருடைய ஜாதகத்தில் அரசாங்க வேலைக்குரிய யோகம் இருந்தாலும் இந்த நான்கு கிரகங்களின் அருள் இருந்தால்தான் அந்த யோகத்தால் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் இல்லையெனில் அரசாங்க வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும்.

- Advertisement -

இந்த தடைகளை நீக்குவதற்குரிய ஒரு எளிய பரிகாரத்தை பார்ப்போம். என்ன தான் படித்து பரீட்சை எழுதி அந்த பரிட்சையில் தேர்ச்சி அடைந்தாலும் பலரால் அரசாங்க வேலையை பெற முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரையில் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொழுது கையில் 11 ஆரஞ்சு பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அங்கு சிவபெருமானிடம் இந்த பழங்களை வைத்து மனதார வேண்டிக் கொண்டு இரண்டு பழங்களை சிவபெருமானிடமே வைத்துவிட்டு மீதம் இருக்கும் ஒன்பது பழங்களை எடுத்துக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு ஆலயத்திற்கு வெளியில் வரும் பொழுது அந்த 9 பழங்களையும் 9 நபர்களுக்கு தானமாக தர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்துவர அரசாங்க வேலையில் இருக்கும் தடைகள் நீங்கும்.

- Advertisement -

இதே போல் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரில் முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காக ஆரஞ்சு பழங்களை வாங்கி கொடுத்து, இதே போல் 11 பழங்களை வைத்து வழிபாடு செய்துவிட்டு 9 பழங்களை திரும்ப எடுத்து வந்து ஒன்பது நபர்களுக்கு தானமாக தர வேண்டும். இப்படி செவ்வாய்க்கிழமை அன்று ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்தாலும் அரசாங்க வேலையில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். ஜாதகத்தில் சூரிய பகவான் மற்றும் செவ்வாய் இவர்களில் யார் நீச்சமடைந்திருக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்குரிய தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அரசாங்க வேலை கிடைப்பதில் இருக்கக்கூடிய தடைகள் விலகும்.

இதையும் படிக்கலாமே: தை செவ்வாய் வீரபத்திர வழிபாடு

அரசாங்க வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்காத பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அவர்கள் முயற்சியுடன் இந்த பரிகாரமும் சேர்ந்து அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.

- Advertisement -