சனிக்கிழமை அன்று இதை செய்தால் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது உறுதி.

sanibagavan1
- Advertisement -

சில பேருக்கு அரசாங்க வேலைக்கு சென்று உத்தியோகம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் வெறித்தனமாக இருக்கும். கை செலவுக்கு கூட மற்ற சாதாரண வேலைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு சூழ்நிலையில் வெற்றி என்பதே கிடைக்காது. நிறைய தேர்வு எழுதி இருப்பார்கள். நிறைய இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருப்பாங்க.

ஆனால் அதில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்திருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் இப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற முத்திரை கூட கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும். சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால்.

- Advertisement -

அரசாங்க வேலை கிடைக்க சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

நல்ல வேலை கிடைக்கணும், செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழனும் என்றாலே அதற்கு இந்த சனிபகவானின் அனுக்கிரகம் கட்டாயம் தேவை. வாரம் தோறும் சனிக்கிழமை நவகிரக சன்னிதானத்திற்கு சென்று சனி பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் கெட்ட நேரத்திலும் நல்லது நடந்து கொண்டே இருக்கும்.

உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா. அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமா. வாரம் தோறும் வீட்டின் அருகில் நவகிரக சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். நேரம் என்பது உங்களுடைய விருப்பம். காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து வேண்டிக் கொள்ளவும்.

- Advertisement -

ஒரு கருப்பு நிற துணி எடுத்துக்கோங்க. அதில் கருப்பு பேரிச்சம்பழம் 2, கருப்பு எள்ளுருண்டை 2, 11 ரூபாய் தட்சனை வைத்து, கருப்பு நூலால் இதை முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். எட்டு என்ற கணக்கில் இதை தயார் செய்து கொள்ள வேண்டும். எட்டு முடிச்சுகள் நமக்கு தேவை.

8 முடிச்சுகளுக்கு உள்ளேயும் தனித்தனியாக 2 கருப்பு எள்ளுருண்டை, 2 பேரைச்ம பழம், 11 ரூபாய் வச்சுக்கோங்க. இதை அப்படியே கொண்டு போய் சனி பகவானின் பாதங்களில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அந்த 8 முடிச்சுகளையும் கோவிலுக்கு வெளியே எடுத்து வந்து, 8 சன்யாசிகளுக்கு தானமாக கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

8 சனிக்கிழமை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்தால் உங்களுக்கு அரசாங்க வேலை உறுதியாக கிடைக்கும். எட்டு சன்னியாசிகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் எட்டு யாசகர்களுக்கு இந்த முடிச்சை தானம் கொடுக்கலாம். எவ்வளவு முயற்சி செய்தும் அரசாங்க வேலை கிடைப்பதில் தடை இருந்தால், அரசாங்க வேலைக்கு நிகரான நிரந்தர வருமானத்தில் ஒரு நல்ல வேலையை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு. ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அவர்களுடைய கையால் இந்த முடிச்சை கட்டி கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு செய்து அவர்களுடைய கையாலேயே தானம் கொடுப்பதுதன் மூலம் முழு பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டால் 21 தலைமுறையாய் தொடர்ந்த பூர்வ ஜென்ம பாவம் தீரும்.

வேறு வழியே இல்லை என்னுடைய பையன், என்னுடைய மகள், இந்த பரிகாரத்தை செய்யவே மாட்டாங்க, எனும் பட்சத்தில் மட்டும் பெற்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -