அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இதையெல்லாம் சரியாக செய்தாலே போதும், போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைப்பது உறுதி. அரசாங்க வேலை கிடைக்க எளிய பரிகாரம்.

sathiya narayana pen flag
- Advertisement -

பொதுவாகவே இளைஞர்கள் தங்கள் வாழ்வில் நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதை பெரும் லட்சியமாகக் கொண்டிருப்பர். அதுவும் அரசாங்க வேலை என்பது அவர்களின் நீண்ட நாள் கனவாகவே இருக்கும். அந்த கனவை நினைவாக்குவதற்கு ஆன்மீகம் ஒரு சில பரிகார முறைகளை நமக்கு சொல்லி தந்து இருக்கிறது. அது என்னென்ன பரிகாரங்கள் அதை எப்படி மேற் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அரசு வேலை என்பது தலைமைத்துவம் மிக்க வேலையாகும். இந்த தலைமைத்துவத்துக்கு அதிபதியாக விளங்குபவர் சூரிய பகவான். மேலும் படிப்பிற்கு அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். ஒருவரின் ஜாதகத்தில் சூரிய பகவானும், புதன் பகவானும் சிறப்பாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த இரண்டு கிரகங்களும் சிறப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும், என்ன செய்யக் கூடாது என்றும் பார்ப்போம்.

- Advertisement -

அரசாங்க வேலை கிடைக்க செய்யக் கூடாத செயல்கள்:
அரசாங்க வேலைக்கு படிப்பவர்கள் தனிமையில் படிப்பதையும், இருட்டு அறையில் படிப்பதையும் தவிர்க்க வேண்டும். படித்து முடித்து விட்டு புத்தகங்களை ஆங்காங்கே போட்டு வைப்பதும், அலங்கோலமாக வைப்பதும் கூடாது. அதே போல் சாப்பிட்டுக் கொண்டே படிக்கக் கூடாது. படிக்கும் இடத்தில் அமர்ந்து சாப்பிடக் கூடாது. காலையில் ஆறு மணிக்கு மேல் உறங்க கூடாது. ஆறு மணிக்கு முன்பாகவே எழுந்திட வேண்டும். அரசாங்க வேலையை எதிர்பார்ப்பவர்கள் கருப்பு மற்றும் ஊதா நிறத்தை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். படிக்கும் இடத்தில் உறங்க கூடாது. மேலும் படிப்பிற்காக தனி அறை இருப்பின், அந்த அறையில் படுத்து உறங்க கூடாது. கட்டிலில் அமர்ந்து படிக்கக் கூடாது. மேற்கூறிய அனைத்து செயல்களும் சனி பகவானின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். ஒருவருக்கு சனி பகவானின் ஆதிக்கம் இருப்பின், சூரிய பகவானால் எந்தவித நன்மையும் ஏற்படாது.

அரசாங்க வேலை கிடைக்க செய்ய வேண்டிய செயல்கள்:
சூரிய வெளிச்சம் இருக்கும் வெட்ட வெளியான தோட்டத்தில் அமர்ந்து படித்தல் சிறப்பிற்குரியது. மேலும் குரு பகவானுக்கு உகந்த நிறமான மஞ்சளில் பேனா புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சூரியனுக்கு உகந்த உணவாக கருதப்படுவது ஆரஞ்சு மற்றும் புதனுக்கு உகந்த உணவாக கருதப்படுவது கீரை. இவை இரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குங்குமப்பூ கலந்த பாலை காலையில் அருந்துவதும், மதிய உணவில் கீரையை சேர்த்துக் கொள்வதும் சூரியன் மற்றும் புதன் கிரகங்களுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் சங்க ரநாராயண தெய்வத்தை வழிபட வேண்டும். அவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து அவருக்கு ஆரஞ்சு, வெல்லம் இவற்றை நெய்வேத்தியம் செய்து மனதார வணங்கி, அந்த நெய்வேத்தியத்தை தானே உண்ண வேண்டும். சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் புதன் கிரகத்தின் அனுகிரகத்தை பெற முடியும். ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் அரசாங்க வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் வெல்லம் மற்றும் சந்தனத்தை ஓடுகின்ற நீரில் போட்டால் அந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி அவர்களுக்கு அரசாங்க வேலை நிச்சயம் கிடைக்கும்.

மேற்கூறியவற்றை எல்லாம் தெரிந்து கொள்வது மட்டும் அல்லாது விடாமுயற்சியுடன் படித்து உங்களின் லட்சியத்தில் கவனத்தை செலுத்தினால் நிச்சயமாக அரசு தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்கும்.

- Advertisement -