அரசாங்க வேலைக்காக முயற்சி செய்பவர்கள் வாழ்வில் ஒரே ஒரு முறை இதை செய்தால் போதும் நீங்கள் எதிர்பார்த்த வேலை நிச்சயம் உங்களை தேடி வரும்.

- Advertisement -

வேலை கிடைப்பதே பெரியதாக இருக்கும் இந்த காலத்தில் அரசாங்க வேலை கிடைப்பது என்பதெல்லாம் கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆனால் இன்னமும் பலருக்கு கால் காசு சம்பாதித்தாலும் அது அரசாங்கம் உத்தியோகமாக இருக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளது. இதற்காக பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் அத்துடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்யும் போது உங்களுடைய முயற்சிகள் பலன் அளிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அரசு வேலை கிடைக்க பரிகாரம்
அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் சூரிய பகவானின் அனுகிரகத்தை பெற வேண்டும். ஏனெனில் இந்த வேலைக்கான முழு பலனையும் கொடுக்கக் கூடிய கடவுள் அவரே. அவரை தினமும் காலையில் எழுந்தவுடன் ஏழு மணிக்கு முன்பாக வணங்கி நம் இரண்டு கைகளாலும் தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்வது போல நீரை தரையில் ஊற்ற வேண்டும் இத்துடன் ஓம் சூர்யாய நமஹ என்று மந்திரத்தையும் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உங்களை தேடி வரும்.

- Advertisement -

அது போல இந்த அரசாங்க வேலைக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொரு தெய்வம் என்று பார்த்தால் அது ஹனுமான் தான். இவரையும் தொடர்ந்து வழிபடுவதுடன் தினமும் அனுமன் சாலிசா படிக்க வேண்டும். இதை படிக்கும் பொழுது வேலைக்கான வாய்ப்புகள் தேடி வருவதுடன் வேலை நிமித்தமாக நீங்கள் எந்த வித தேர்வுகள் எழுதினாலும் அதில் சிறந்து விளங்க கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

அத்துடன் இந்த ஒரு சிறிய பரிகாரத்தையும் செய்யும் போது வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய துண்டு படிகார கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் மூன்று மிளகு, இரண்டு சிறிய துண்டு பட்டை இது மூன்றையும் உங்களது வலது கையில் வைத்து இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் தலையை சுற்றி 21 முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு இந்த பொருளை எல்லாம் யாரும் கால் படாத இடத்தில் அல்லது ஓடும் நேரில் விட வேண்டும்.

- Advertisement -

இது மட்டும் இன்றி தினமும் மூன்று மஞ்சள் வாழைப்பழத்தை பசு மாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும். இது போல பறவைகளுக்கு தானியங்களை தினமும் வைப்பதாலும் இந்த வாய்ப்புகள் உங்களுக்கு விரைவில் கைக் கூடும். கடவுள்களின் ஆசிர்வாதமும் ஜீவராசிகளுக்கு நீங்கள் செய்யும் தானமும் வேலைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

அரசாங்கப் பணிக்காக முயற்சி செய்பவர்கள் நிச்சயம் அதற்கான முயற்சிகளை  எடுக்க வேண்டும். அதற்கான தேர்வு முறைகள் பயிற்சிகள் போன்றவற்றை முழுமையாக செய்வதுடன், இந்த பரிகாரத்தையும் செய்யும் போது உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் நிச்சயம் கை கூடும்.

இதையும் படிக்கலாமே: சிலந்தி வலை போல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையை பின்னிப்பிணைத்துக் கொண்டதா? 11 நாட்கள் இந்த விளக்கை மட்டும் விநாயகரை நினைத்து ஏற்றுங்கள். சிரமமே இல்லாமல் சிக்கலில் இருந்து வெளிவரலாம்.

இந்த பரிகார முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுடன் உங்களுடைய முயற்சிகளையும் தொடர்ந்து செய்து அரசாங்க வேலைக்கான வாய்ப்புகளை விரைவில் பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -