சிலந்தி வலை போல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையை பின்னிப்பிணைத்துக் கொண்டதா? 11 நாட்கள் இந்த விளக்கை மட்டும் விநாயகரை நினைத்து ஏற்றுங்கள். சிரமமே இல்லாமல் சிக்கலில் இருந்து வெளிவரலாம்.

manjal-pillaiyar3
- Advertisement -

எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும் அதை சுலபமாக சரி செய்யக்கூடிய சக்தி அந்த இறைவனுக்கு உண்டு. அதிலும் கஷ்டங்களைப் போக்கும், விக்ணங்களை தீர்க்கும் இந்த விநாயகர் வழிபாட்டிற்கு எப்போதுமே ஒரு பவர் இருக்குங்க. நம்பிக்கையோடு விநாயகரை வழிபாடு செய்து பாருங்கள். முழு முதல் கடவுள் உங்களுக்கு முழுமையான சந்தோஷத்தை கொடுத்து விடுவார். அந்த வரிசையில் தீராத சிக்கலை தீர்ப்பதற்கு விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து 11 நாட்கள் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம்.

சிக்கலை தீர்க்கும் கணபதி வழிபாடு:
ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். மஞ்சள் பிள்ளையாருக்கு மேலே ஒரு அருகம்புல். இந்த வெற்றிலையின் மேல் 1 ரூபாய் நாணயம். இதை பூஜை அறையில் தயார் செய்துவிட்டு, இந்த விநாயகருக்கு ஒரு மண் பகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக இதை நீங்கள் செய்யக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.(காலை 5.30 மணிக்கு முன்பு இந்த பூஜையை நிறைவு செய்து கொள்வது சிறப்பு.) 11 நாட்களும் பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மேல் சொன்னபடி தயார் செய்துவிட்டு, இந்த விளக்குக்கு முன்பு அமர்ந்து உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத ஒரே ஒரு சிக்கல் என்ன, அதை நினைத்து அந்த சிக்கலை சரி செய்து தரும்படி விநாயகரிடம் மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். பிரார்த்தனையில் எந்த குறையும் இருக்கக் கூடாது. பிரச்சனை சரியாகிவிடுமா என்ற சந்தேகம் ஒரு துளி அளவும் இருக்கக் கூடாது. விநாயகரை கும்பிட்டால் பிரச்சனை சரியாகும் என்று நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும்.

தொடர்ந்து 11 நாள் இதை செய்ய வேண்டும். ஒரு நாள் கூட தடை ஏற்படக் கூடாது. அதற்கு ஏற்றது போல பிளான் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. சரி முதல் நாள் வழிபாட்டை முடித்து விட்டோம். அடுத்த நாள் வழிபாட்டை எப்படி செய்வது. முதல் நாள் காலை பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரையும் வெற்றிலையை மட்டும் எடுத்து, அன்று மாலை 6.00 மணிக்கு முன்பாக மஞ்சள் பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். வெற்றிலையை செடி கொடிகள் இருக்கும் இடத்தில் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அந்த ஒரு ரூபாய் மட்டும் உங்க வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை புது வெற்றிலை, புது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பிள்ளையாருக்கு பக்கத்தில் வைத்து வழக்கம் போல வழிபாட்டை செய்யுங்கள். 11 வது நாள் இந்த வழிபாட்டை முடித்துவிட்டு அந்த 1 ரூபாய் நாணயத்தை எடுத்து விநாயகர் கோவில் உண்டியலில் செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் ஒரு துளி அளவும் குறையாது. நாளுக்கு நாள் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

விநாயகருக்கு ஒரு சிதரு தேங்காய் உடைத்து கொழுக்கட்டை அல்லது மோதகம் பிரசாதமாக செய்து அர்ச்சனை செய்து கோவிலுக்கு சென்று உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த கொழுக்கட்டையை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுங்கள். இந்த 11 நாட்களுக்குள்ளாகவே உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் அந்த தீராத சிக்கல் தீர்வதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -