துன்பமும் துயரமும் உங்களிடம் முட்டிமோதி தோற்றுப்போகும். தினம் தினம் உங்கள் கையால் இதை மட்டும் தொட்டுக் கொள்ளுங்கள் போதும்.

Sivan-Manthiram (1)
- Advertisement -

மனித பிறவி எடுத்தால் துன்பத்திலும் துயரத்திலும் அடிபட்டு கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலைமை. ஆனால் நம்மை கண்டு அந்த துன்பமும் துயரமும் துவண்டு போக வேண்டும் என்றால் தினமும் நாம் எந்த பொருளை தொட வேண்டும் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. மிக மிக சுலபமான அதேசமயம் சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் வேண்டுமென்றால் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் உங்கள் கையால் இந்த ஒரு பொருளை தொட்டுப் பாருங்கள். துன்பம் துயரம் கஷ்டம் அழுகை வறுமை நோய் ஏவல் பில்லி சூனியம் எதுவாக இருந்தாலும் உங்களை கண்டு பயந்து நடுங்கும்.

சரி, முதலில் நம்மை பாதுகாக்க போகும் அந்த பொருள் எந்த பொருள் என்பதை தெரிந்து கொள்வோம். விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு உகந்த அருகம்புல் தான் அந்த ஒரு பொருள். சுலபமாக நாம் எல்லோருக்கும் இந்த அருகம்புல் தினமும் கிடைக்கும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். முந்தைய நாளில்கூட இந்த அருகம் புல்லை வாங்கி ஒரு கவரில் போட்டு கட்டி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காலை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது.

- Advertisement -

காலையில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு பத்து அருகம்புல் இருந்தாலும் சரி, உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்து ‘ஓம்’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு கையிலிருக்கும் அருகம்புல்லை அப்படியே நெஞ்சு குழியில் வைத்து ‘ஓம்’ எனும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

அப்படியே அடுத்ததாக உங்களுடைய கையை உச்சந்தலையில் வைத்து ‘ஓம்’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு, கையில் இருக்கும் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்து விட்டு வினாயகரையும் குல தெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்வில் எந்த தடையும் இருக்கக் கூடாது. என்னுடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும். தடைகளும் தடங்கல்களும் துன்பங்களும் வந்தால்கூட அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு வேண்டும்  என்று வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வளவு தான். பூஜையை நிறைவு செய்து கொண்டு உங்களுடைய தினசரி வேலையை செய்யத் தொடங்குங்கள். பூஜை அறையில் இருக்கும் அறுகம்புல் காய்ந்தவுடன் பூக்களோடு எடுத்து போட்டு விடலாம்.

- Advertisement -

இதேபோல அருகம்புல்லை தினமும் உங்களுடைய கையில் தொட்டு வழிபாடு செய்யும் போது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையும், உத்வேகமும் பிறக்கும். ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி உங்களுக்குள் வந்துவிடும். இந்த உலகத்தை ஜெயித்து விடலாம் என்ற எண்ணமும் தோன்றும்.

இந்த பதிவில் படிப்பதன் மூலம் உங்களால் இந்த வழிபாட்டு முறையில் சக்தியை நிச்சயம் உணர முடியாது. உங்களுக்கு விநாயகரின் மீதும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள இறைசக்தி மீதும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -