விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் காரியத்தடை என்பதே இருக்காது. நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம் வெற்றிதான். உங்கள் வாழ்க்கை தித்திப்பாக மாறிவிடும்.

manjal-pillaiyar3
- Advertisement -

பல தடைகளை தாண்டி, நம்முடைய முயற்சியில் வெற்றி அடைந்து இருப்போம். இந்த கடைசி முயற்சியில் மட்டும் நான் வெற்றி அடைந்து விட்டால் போதும். என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்ததை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் சந்தோசமாக இருப்போம். ஆனால் கடைசி நேரத்தில், கடைசி முயற்சியில் நாம் தோற்றுப் போய் இருப்போம். கடந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் வீணாக போய் இருக்கும். இப்படிப்பட்ட கடைசிநேர தோல்வியை சந்தித்தவர்களுக்கு தான் தெரியும். அதனுடைய வலி என்ன என்பது. என்னிடம் பணம் உள்ளது, பதவி உள்ளது, படைபலம் உள்ளது, தைரியம் தன்னம்பிக்கை எல்லாம் உள்ளது. ஆனால் பல தடைகளை தாண்டி வந்த என்னால், கடைசி நிமிடத்தில் கடைசி புள்ளியில் ஜெயிக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம் தான் இது. காரியத்தடை விலக, காரிய சித்தி அடைய, விநாயகரை எப்படி வழிபாடு செய்வது.

நாட்டு மருந்து கடைகளில் அருகம்புல் பொடி, சுத்தமான மஞ்சள் பொடி, தூய்மையான தேன், இந்த மூன்று பொருட்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். பூஜை அறையை எப்போதும்போல சுத்தம் செய்து விட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, தீபமேற்றி வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலை இந்த பூஜையை செய்யலாம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக அருகம்புல் பொடி, சுத்தமான மஞ்சள், இரண்டு பொருட்களையும் சம அளவு போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு தேன் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இதை அப்படியே மஞ்சள் பிள்ளையார் போல பிடிக்க வேண்டும். பிடித்த மஞ்சள் பிள்ளையாரை அப்படியே ஒரு வெற்றிலையின் மேல் வைத்து அந்தப் பிள்ளையாருக்கு ஒரு குங்கும பொட்டு வைத்து, பூ வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

உங்களுடைய பூஜை அறையில் நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, ஜோதி விளக்கு, என்று எந்த தீபத்தை ஏற்றி இருந்தாலும் சரி, தனியாக ஒரு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு இந்த மஞ்சள் விநாயகருக்கு முன்பாக தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதற்குப் பின் பிடித்து வைத்திருக்கும் இந்த விநாயகரை பார்த்தவாறு பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் எந்த காரியத்தையும் ஏற்படக்கூடாது. வாழ்க்கையில் வெற்றிபெற தடைகள் இருந்தாலும், அதைத் தகர்க்க ‘விநாயகரை நீயே துணை’ என்று விநாயகரை துணைக்கு கூப்பிட்டு கொள்ள வேண்டும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு இந்த விநாயகரை வணங்கிவிட்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

வாரத்திற்கு ஒரு நாள் வெற்றிலையையும் அதன் மேலே பிடித்து வைத்திருக்கும் பிள்ளையாரையும் எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது செடிகொடிகளுக்கு அடியிலோ போட்டுவிட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை புதியதாக பிள்ளையாரை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல் உங்களுடைய முயற்சியில் வெற்றி கிடைக்கும் வரை, இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் புதியதாக காரியத்தை தொடங்கும் போது மட்டும் ஒரு வாரம் இந்த வழிபாட்டு முறையை செய்து விட்டு அதன் பின்பு உங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டாலும், உங்களுக்கு கை மேல் பலன் உண்டு.

நம்பிக்கை உள்ளவர்கள் விநாயகப் பெருமானை இந்த அருகம்புல் பொடி மஞ்சள் பொடி ரூபத்தில் வழிபாடு செய்து அருளாசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -