தினமும் இந்த 1 பொருளை தொட்டு வணங்கினால் எவரும் உங்களை தோற்கடிக்கவே முடியாது தெரியுமா? தொட்டதெல்லாம் வெற்றியடைய செய்யும் புல்!

arugampul-vinayagar-dhoobam
- Advertisement -

ஈசனின் மைந்தனான விநாயகப் பெருமானுக்கு முழுமுதற் கடவுள் என்கிற பெயருக்கு ஏற்ப அவரை முழுமையாக முதற் கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகரை வணங்கிய பின்பே மற்ற கடவுள்களை வழிபட வேண்டும் என்பது புராணங்கள் கூறும் வழிமுறை ஆகும். இப்படி விநாயகரை கும்பிட்டு ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் தோல்வியை தழுவுவது இல்லை. எத்தகைய பகைவர்களையும் வென்று எடுக்கக் கூடிய வலிமையை பெறுவதற்கு தினமும் உங்களுடைய கையில் இந்த பொருளை தொடுவது நல்லது. அது என்ன? அதற்குரிய வழிமுறைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய வகையில் நிறைய பேர், நிறைய சூழ்ச்சிகளை சில சமயங்களில் புரிவது உண்டு. இதனால் தடைகளை சந்தித்துக் கொண்டு வரும் நமக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பொறாமை மற்றும் பகைவர்களின் சூழ்ச்சியால் தடைப்பட்டுக் கொண்டே செல்லும் பொழுது நம்முடைய வளர்ச்சிக்கான பாதை நீண்டு கொண்டே செல்லும்.

- Advertisement -

சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம்முடைய நன்மையை விரும்புபவர்கள் அல்ல! நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மை எதிர்த்து நிற்பவர்களை தோற்கடிக்க செய்யும் அற்புதமான ஆற்றல் படைத்துள்ளது இந்த பொருள். முழுமுதல் கடவுளான விநாயகருக்கு உரிய இந்த பொருள், மிகவும் லேசானது! ஆனால் இதன் தன்மையில் இதனுடைய எடை எதற்கும் ஈடில்லாத அளவிற்கு மகத்துவமானதாக இருக்கின்றது.

எடைக்கு எடையாக எதைக் கொடுத்தாலும் ஈடாகாத பொழுது இந்த ஒரு பொருளை கொடுத்து ஈடுகட்டி விடலாம்! அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த இந்த ஒரு பொருள் புல் வகையை சார்ந்தது. இதை அருகம்புல் என்று கூறுவார்கள். அறுகம்புல் சாதாரண புல்லை போல அல்லாமல் சற்று வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும். மிகவும் மெல்லிய மற்றும் நீளமான வடிவில் அமைக்கப் பெற்றிருக்கும் இந்த அருகம்புல் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, ஆன்மிகத்திலும் நிறையவே உதவிகள் புரிகின்றது.

- Advertisement -

பிள்ளையாருக்கு உகந்த இந்த அருகம்புல்லை தினமும் தொட்டு வணங்குபவர்களுக்கு தோல்வி என்பதே நெருங்குவது இல்லை. அதை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்றால் முதலில் காலையில் எழுந்த பின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். நீங்கள் ஏற்றும் தீபம் ஆனது சுடர்விட்டு எரிய வேண்டும். அதன் பின்பு கையில் அறுகம்புல்லை வைத்துக் கொண்டு நாற்பத்தி எட்டு முறை ‘ஓம் கணேசாய நமஹ’ என்கிற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

அதன் பின்பு உங்கள் கையில் இருக்கும் அருகம்புல்லை விநாயகரின் திருவடியில் வைத்து விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். போகிற காரியம் வெற்றி அடையவும், உங்களுக்கு எந்த விதமான தடைகள் இல்லாமல் நீங்கள் நினைத்ததை அடைய வேண்டி கொண்டு வீட்டிற்கு செல்லலாம். இந்த அளவிற்கு பெருமைகள் நிறைந்துள்ள அருகம் புல்லை எக்காரணம் கொண்டும் தவற விட்டு விடக் கூடாது. விநாயகருக்கு உகந்த இந்த அறுகம்புல்லை தினமும் விநாயகருக்கு சமர்ப்பித்து உங்களுடைய வேண்டுதல்களை வேண்டிக் கொண்டு பின்னர் வெளியே சென்றால் எத்தகைய சூழ்ச்சிகளும் உங்களை நெருங்காது. பகைவர்கள் தொல்லை ஒழிந்து வெற்றிகள் குவியும்.

- Advertisement -