இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டால், உங்கள் உடம்பை பிடித்த பீடை, கெட்ட சக்தி, கெட்ட எண்ணம், அடுத்தவர் மீது உள்ள பொறாமை, பழிவாங்கும் குணம் அத்தனையும் பொசுங்கி போகும்.

vinayagar-arugampul
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கும், இன்னொருவர் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாமல் கஷ்டப்படுவதற்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் கிடையாது. மிகச்சிறிய வித்தியாசம் தான் இருக்கும். அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள், அடுத்தவர்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் கொண்டவர்கள் அவ்வளவுதான். நாம் எதை விதைக்கின்றோமோ அது தான் முளைக்கும். விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதலில் பின் சொல்லக் கூடிய விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

முதலில் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களைப் பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. நம்மை விட வசதியில் அதிகமாக உள்ளார்களா? செல்வந்தர்களாக உள்ளார்களா? அது அவர்களுக்கு கிடைத்த வாழ்க்கை. அவர்கள் அந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதேபோல நாமும் பணக்காரர்களாக வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நம்மை விட செல்வந்தர்களை முதலில், நாம் திட்டும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்.

- Advertisement -

சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘இவன் புது பணக்காரன். இவனுக்கு பணம் எப்படி வந்தது? அடுத்தவர்களை ஏமாற்றி பிழைத்தவன். இவன் எல்லாம் இன்று சமுதாயத்தில் பெரிய மனிதன் ஆகிவிட்டான் என்று’ நம்மை விட பெரிய பெரிய பணக்காரர்களை நம்மை அறியாமலேயே திட்டி தீர்த்து விடுவோம். இந்த வெறுப்பு, இந்த பொறாமை குணம், இந்த வயிற்றெரிச்சல் எதனால் வருகிறது? அவனுடைய பெயர் பணம் புகழ் இவைகளின் மீது நமக்கு இருக்கக்கூடிய மோகம். அந்த மோகத்தின் வெளிப்பாடு தான், அந்த பணக்காரனின் மீது நமக்கு எடுக்கக்கூடிய கோபம் வார்த்தையாக மாறி வெளியே வருகிறது.

மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, நம்முடைய தேவைக்கு ஏற்ப நம் கையில் பணம் இல்லை. ஆனால் அவசியமான தேவை எனும்போது நம்மை தேடி நிச்சயம் பணம் வரும். அதற்கான வழியை அந்த ஆண்டவன் காண்பிப்பான். நான் நன்றாகத் தான் இருக்கின்றேன். சந்தோஷமாகத் தான் இருக்கின்றேன் என்று உங்களுடைய மனதளவில் நிறைவாக நினைத்து வாழ்க்கையை முழு திருப்தியோடு வாழ வேண்டும். இப்படி செய்தாலே நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வராது. வாழ்க்கை அது பாட்டுக்கு செல்லும்.

- Advertisement -

சரி, இப்படிப்பட்ட தீய எண்ணங்கள் எல்லாம் நமக்கு எங்கிருந்து வந்தது. எதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் நம்மை பிடித்து ஆட்டுகிறது என்று யோசித்துப் பார்த்தால், ஒரே ஒரு விஷயம்தான். நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி. கெட்ட சக்தியின் ஆதிக்கம் தான் உங்களை இப்படி ஆட்டிப் படைத்து கொண்டிருக்கிறது. அந்த நெகட்டிவ் எனர்ஜியை உடம்பிலிருந்து நீக்க ஒரு சின்ன வழிபாடும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஒரு கட்டு அருகம்புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். உங்களுடைய கெட்ட எண்ணங்கள் பொறாமை குணம் கோபம் எரிச்சல் தரித்திரம் அனைத்தும் உங்கள் உடம்பை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த அருகம்புல் கட்டை உங்களுடைய தலையை சுற்றிவிட்டு, அந்த அருகம்புல் கட்டை கொண்டு போய் விநாயகரின் பாதங்களில் வைத்துவிட்டுங்கள். (உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரின் பாதங்களில் வைக்கலாம். அரச மரத்தடி விநாயகர் பாதங்களில் வைக்கலாம். கோவிலுக்குள் சன்னிதானத்தில் இருக்கும் விநாயகரின் பாதங்களிலும் வைக்கலாம். எந்த விநாயகர் பாதங்களில் வைத்தாலும் தவறு கிடையாது.)

இதே போல் எத்தனை நாட்கள் செய்வது. உங்களால் எப்போதெல்லாம் இந்த பரிகாரத்தை செய்ய முடியுமோ, அப்போதெல்லாம் இந்த அருகம்புல் பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர, உங்கள் உடம்பை பிடித்திருக்கும் கெட்ட சக்தி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பிலிருந்து நீங்கும். உங்களை அறியாமலேயே நீங்கள் அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து, அதேபோல நாமும் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள்.

உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய குடும்பம், உங்களுடைய வருமானம், உங்களுடைய தொழில் என்று நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பார்த்துட்டு இருப்பீங்க. இப்படி இருந்தாலே போதுங்க. வாழ்க்கையில் எந்த துன்பமும் வராது. எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையில் அடுத்தவர்களை பார்த்து, நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைக்காதீங்க. இதுதான் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு. எல்லாருக்கும் புரியணும்னா இப்படி தாங்க சொல்லி ஆகணும். வேறு வழி இல்லை. உங்களுக்கும் மேலே சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால், பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -