முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க, இந்த ஒரே 1 பொருள் போதும். கேரளத்து பெண்களின் பியூட்டி சீக்ரெட் உங்களுக்காக.

face
- Advertisement -

சருமம் என்றாலே அதில் பல வகைப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். சிலபேருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். முகப்பரு, முகப்பரு வந்த தழும்புகள் இருக்கும். சில பேருக்கு வாயை சுற்றி மட்டும் கருப்பாக இருக்கும். சில பேருக்கு மூக்கின் ஓரங்களில் கருநிறம் இருக்கும். சில பேருக்கு நெற்றியில் கருப்பு நிறமாக இருக்கும்‌. முகம் முழுவதும் ஒரே நிறமாக இருக்காது. இப்படி பலபேருக்கு பல வகையான சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. எல்லா சரும பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு தீர்வு கிடைப்பது என்பது மிக மிக அரிதான விஷயம். அதுவும் இயற்கையான முறையில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றால் அது நமக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

face-skin

கேரளத்து மக்கள் அழகை மேம்படுத்துவதற்காக செய்யக்கூடிய எல்லா விஷயங்களிலும் இந்த ஒரு பொருளை சேர்த்துக் கொள்வார்கள். இயற்கையாக இயற்கை நமக்கு தந்த இந்த பொருளை நம்முடைய சருமத்தில் பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நம்முடைய முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.

- Advertisement -

நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். ஹெர்பல் சம்பந்தப்பட்ட பொருள்களில் எதை நாம் அழகை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தினாலும் சரி, உடனடியாக ரிசல்ட்டை எதிர்பார்க்கக்கூடாது. இதை நீங்கள் பயன்படுத்த பயன்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய சருமத்தில் உள்ள பிரச்சனைகள் குறைவதை கண்கூடாக காணலாம். சரி, அது என்ன டிப்ஸ் நேரத்தைக் கடத்த வேண்டாம். இப்போதைய பார்த்துவிடுவோம்.

face1

நம்முடைய முகத்திலிருக்கும் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வை கொடுக்க நாம் பயன்படுத்தப் போகும் அந்த ஒரு பொருள், ‘அஸ்வகந்தா பொடி’. இது நாட்டு மருந்து கடைகளில் நமக்கு கிடைக்கும். நாட்டுமருந்து கடைகளில் சென்று வாங்க முடியாதவர்கள் ஆன்லைனில் இதை வாங்கிக் கொள்ளலாம். இது ஒரு மூலிகைப் பொருள். இந்த அஸ்வகந்தா பொடியை உங்களுடைய முகத்திற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டிற்கு 2 ஸ்பூன் அஸ்வகந்தா பொடி எடுத்துக்கொண்டால், அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவு தயிரை ஊற்றி நன்றாக கலந்து பேஸ்டாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பேஸ்டை முகத்தில் பேக் போட வேண்டும். முதலின் முகம் முழுவதும் இந்த பேஸ்டை அப்ளை செய்து கொள்ளுங்கள். அடுத்து எந்த இடத்தில் அதிகமாக உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதோ, வாயை சுற்றி கருவளையம் இருந்தால் கன்னத்தில் முகப்பரு தழும்புகள் இருந்தால், கண்ணுக்குக் கீழே கருவளையம் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் கொஞ்சம் அடர்த்தியாக போட்டுக்கொள்ளலாம். 20 நிமிடங்கள் இந்த ஃபேஸ் பேக் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் உங்களுடைய முகத்தை லேசாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள்.

ashwagantha

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஃபேஸ் பேக்கை உங்களுடைய முகத்தில் பயன்படுத்தி வரலாம். முகத்தை நன்றாகக் கழுவி விட்டு அதன் பின்பு இந்த பேக்கை போட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.

face2

சிலபேருக்கு ஆயில் ஸ்கின் இருக்கும். அவர்கள் தயிர் பயன்படுத்த வேண்டாம். தயிருக்கு பதிலாக ரோஸ் வாட்டரை பயன்படுத்திக்கொள்ளலாம். ரோஸ் வாட்டர் வாங்க முடியாது என்பவர்கள் வெறும் தண்ணீரில் இந்த அஸ்வகாந்த பவுடர் கலந்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் கூட நல்ல ரிசல்ட் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க. பக்க விளைவுகள் எதுவும் வராது என்பதற்கு 100% கேரண்டீ.
- Advertisement -