ஆடியில் அஷ்டலட்சுமிகளின் ஸ்தோத்திரத்தை உச்சரித்தால் 16 செல்வங்களும் பெருகும் தெரியுமா? எப்போது எப்படி உச்சரிக்க வேண்டும்?

astalakshmi-mantra
- Advertisement -

ஆடி மாதத்தில் அஷ்ட லட்சுமிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்களாம். இவர்களை நினைத்து இவர்களுடைய துதிகளை உச்சரித்து வந்தால் சகல விதமான செல்வங்களும் அதாவது 16 செல்வங்களும் நமக்கு கிட்டும் என்பது ஐதீகம். ஆடி மாதம் மட்டும் அல்ல, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களிலும் அஷ்டலட்சுமிகளின் ஸ்தோத்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு பணக்கஷ்டம் என்பதே வராது! அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த அஷ்டலட்சுமிகளின் ஸ்தோத்திரங்களும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை கௌரி நல்ல நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து ஒரு முறை உச்சரித்தால் போதும்.

அஷ்டலட்சுமிகளின் படம் அல்லது மகாலட்சுமியின் படத்தை வைத்து வழிபட வேண்டும். எப்போதும் போல சாதாரணமாக விளக்கு ஏற்றி தூபம் காண்பித்தால் போதும். பெரிதாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு மந்திரத்தையும் வாயை திறந்து சத்தமாக உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் அதிர்வலைகள் நமக்கு அதற்குரிய பலனையும் கொடுக்கிறது எனவே மனதிற்குள் உச்சரிக்காமல் சத்தமாக ஒரு முறை உச்சரித்து பின்னர் தூபத்தை காண்பித்தால் போதும். இதோ உங்களுக்காக அஷ்டலட்சுமிகளின் மந்திரங்கள் இப்பதிவில்!

- Advertisement -

ஆதி லட்சுமி ஸ்தோத்திரம்:
ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே

பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

- Advertisement -

சந்தான லட்சுமி ஸ்தோத்திரம்:
அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே

சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி பாலயமாம்

- Advertisement -

கஜ லட்சுமி ஸ்தோத்திரம்:
ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே

ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

தன லட்சுமி ஸ்தோத்திரம்:
திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே

வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

தான்ய லட்சுமி ஸ்தோத்திரம்:
அபிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே

மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

விஜய லட்சுமி ஸ்தோத்திரம்:
ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே

கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

வித்யா லட்சுமி ஸ்தோத்திரம்:
ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே

நவநிதி தாயினி கலிகல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம்

தைரிய லட்சுமி ஸ்தோத்திரம்:
ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே

பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்.

- Advertisement -