பணத்தை தண்ணீரைப் போல் செலவழிக்கக் கூடிய 5 ராசிக்காரர்கள்! இவர்களுக்கு கடன் கொடுப்பதிலும் கூட கவனம் தேவையா?

astro-cash
- Advertisement -

பணம் தான் வாழ்க்கையா? என்று வியாக்கியானம் பேசுபவர்கள் கூட பிரச்சனை என்று வரும் பொழுது பணம் தான் முக்கியம் என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொள்வார்கள். நாம் என்ன தான் அன்பு, கருணை, பாசம் எல்லாம் முக்கியம் என்று நினைத்தாலும் அதை கூட விலைக்கு வாங்க பணம் தான் தேவை என்று சில சமயங்களில் தோன்றி விடுகிறது. அந்த அளவிற்கு பணமானது அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட இந்த சூழ்நிலையில் பணத்தை தண்ணீரைப் போல இந்த ராசிகள் செலவு செய்து கொண்டிருந்தால் இவர்களை நம்பி என்ன செய்வது? கடன் கொடுக்க கூட சற்று அஞ்ச தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது. அப்படியான டாப் 5 ராசிகள் யாரெல்லாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் எந்த அளவிற்கு பணத்தை குறியாக நினைத்து சேமிக்கிறார்களோ! அதே அளவிற்கு தாராளமாக செலவு செய்யவும் துணிபவர்களாக இருப்பார்கள். திட்டமிடாமல் சில சமயங்களில் மகிழ்ச்சிக்காக செலவிடும் பணத்தால் பெரும்பாலும் ஏமாற்றம் அடைகின்றனர். திட்டமிட்டு அதன் பின் செலவு செய்வதால் அதிக பணத்தை சேமிக்க முடியும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் தனக்கென எந்த ஒரு ஆடம்பரத்தையும் செய்து கொள்வதில்லை. தங்களை சார்ந்து இருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் போன்றவர்களுக்காக அதிகமாக செலவு செய்வார்கள். தங்கள் உடன் இருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆக இருப்பார்கள். இப்படி மற்றவர்களைப் பற்றிய கவனத்தில் தங்களை கவனித்துக் கொள்வதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளை அஞ்சாமல் செய்வார்கள். இவர்களுக்கு நவீன ரக பொருட்களின் மீது அதீத மோகம் இருக்கும். உணவுப் பிரியர்காளாக இருக்கும் இவர்கள் புதிய புதிய உணவுகளை விரும்பி உண்ண வேண்டும் என்பதில் அதிகம் செலவழிக்க கூடியவர்களாக இருப்பார்கள். மின்னணு உபகரணங்கள் ஆசைக்காக புதிது புதிதாக வாங்கி தேவையில்லாமல் செலவு செய்துவிட்டு பின்னர் காசில்லாத சமயத்தில் கடன் வாங்கி தவிப்பார்கள். எந்த ஒரு பொருளும் தனக்கு தேவைதானா? என்பதை சிந்தித்து விட்டு செயலாற்றினால் இவர்களுக்கு நல்லது.

- Advertisement -

மீனம்:

மீன ராசிக்காரர்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்கள். தன்னிடம் வந்து யார் எது கேட்டாலும் உடனே அதனை மறக்காமல் அள்ளி கொடுத்து விடுவார்கள். சுயநலமில்லாத இவர்களிடம் அதிக பணம் சம்பாதிக்க கூடிய திறமை இருந்தாலும், திறமைக்கு உரிய வாய்ப்புகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தன்னிடம் எவ்வளவு இருந்தாலும் அதனை நல்ல விஷயங்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செலவு செய்து விடுவார்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் நிகழ் காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம்? மகிழ்ச்சியாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். எதிர்காலம் பற்றிய பயம் கொஞ்சம் கூட இல்லாமல் இருப்பார்கள். எனவே இவர்களிடம் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இன்று நாம் இந்த பணத்தை வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறோமா? நாளை நான் சம்பாதித்து கொள்வேன் என்கிற உணர்வோடு செயல்படுபவர்களாக இருப்பார்கள். விரும்பிய இடங்களுக்கு செல்வதும், விரும்பியதை வாங்குவதும் ஆக இவர்கள் தண்ணீரைப் போல பணத்தை செலவழிப்பார்கள். பூர்வ புண்ணிய கர்ம வினைக்கு ஏற்ப இவர்களுக்கு எதிர்காலமும் அமையும்.

- Advertisement -