குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

guru peyarachi
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சியும் குருவின் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் நேற்று மே 1ஆம் தேதி மதியம் 12 .59 மணி அளவில் குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்திருக்கிறார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கு இருந்தாலும் சில ராசிகள் மட்டும் குருவின் இந்த பெயர்ச்சியானது ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் காண்போம்.

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

கிரகங்களிலே குரு பகவான் ஆனவர் மங்கள கிரகமாக கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் நல்ல நிலையில் இருக்கும் போது அவர்கள் வாழ்க்கை, குழந்தை, செல்வம் கல்வி அந்தஸ்து என அனைத்திலும் முழுமை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். இந்த பெயர்ச்சியால் இது போன்ற அதிர்ஷ்ட வாழ்க்கை பெறப் போவது யார் என்று பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷபம்

இந்த குரு பெயர்ச்சியானது ரிஷப ராசியில் தான் நடந்துள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. ரிஷப ராசிக்காரர்கள் வியாபாரம், தொழில், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் முன்னிலையில் இருப்பார்கள். தொழில் தொடர்பான அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். பணவரவில் பல மடங்கு முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.

மிதுனம்

குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் காத்திருக்கிறது என்று சொல்லலாம். தொழில் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு அதிகரிக்கும். குருவின் அருளால் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்

இந்த குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் பல சிறப்பான பலன்களை பெறப் போகிறார்கள். எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இது முன்னேற்றமான காலம் தான். பணவரவால் நல்ல ஆதாயம் அடைவீர்கள் முன்னோர்களின் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதார பல மடங்கு உயரும் கடின உழைப்பு இருந்தால் குருவின் அருளால் டாப்புக்கு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கும் இந்த பெயர்ச்சி பல அதிர்ஷ்டமான பலன்களை தர உள்ளது. இந்த பெயர்ச்சியின் மூலம் இவர்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பணி இடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் உருவாகும். சம்பள உயர்வு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். செல்வம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குருவின் இந்த பெயர்ச்சியால் மகிழ்ச்சியில் திளைக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகும்.

- Advertisement -

கன்னி

குரு பெயர்ச்சியால் சுப போக வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறவர்கள் இவர்கள். இந்த ராசிக்காரர்கள் வியாபாரம், தொழில், வேலை என அனைத்து துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டு. இதுவரை தொழில் தொடர்பாக இருந்து வந்த முடக்கங்கள் அனைத்தும் சரியாகும். கடன்களில் இருந்தும் விடுபடுவார்கள். பண வரவு அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உருவாகும்.

மகரம்

குரு பெயர்ச்சியால் பணவரவில் பல மடங்கு யோகத்தை பெறப் போகிறவர்கள் இவர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணலாம். நீண்ட நாட்களாக பணியில் இருந்து வந்த தடங்கல்கள் முடிந்து வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு மனை சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உருவாகும். நண்பர்கள் குடும்பம் உறவினர்கள் என அனைவரின் ஆதரவு முழுவதுமாக கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது என்றே சொல்லலாம். செல்வம் அனைத்து திசையிலும் இருந்தும் வந்து கொண்டே இருக்கும். வீடு, நிலம், மணல் போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்கள் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் சொத்து வாகனம் சேர்க்கக் கூடிய யோகமும் உண்டு. குடும்பம் பணியிடம் என அனைத்திலும் மகிழ்ச்சியாய் இருக்க கூடிய காலம் இது.

இதையும் படிக்கலாமே: 1-5-2024 குரு பெயர்ச்சியில் பணக்கஷ்டத்தை பெரும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான் இந்த பதிவில் உள்ள கருத்துக்கள். இதில் அவரவர் கிரக நிலைகளுக்கு ஏற்ற மாற்றங்கள் நிச்சயம் உண்டு என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -