இந்த ஒரு சின்ன மரக் குச்சியை எந்த பொருளின் மேல் வைத்தாலும் அந்த பொருள் உங்கள் வீட்டில் பல மடங்காக பெருகும்.

gold
- Advertisement -

பொதுவாக எல்லோருக்குமே அவரவர் கையில் இருக்கும் பணம், நகை, சொத்து சுகம், வண்டி வாகனம் எல்லாம் பல மடங்காக பெருக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது மட்டும் இல்லைங்க. இவை எல்லாவற்றையும் தாண்டி சில பேருக்கு பணம் நகையைத் தவிர வேறு சில ஆசைகளும் இருக்கும். நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நிறைய பட்டுப் புடவை வாங்க வேண்டும் என்ற ஆசை கூட சில பேருக்கு இருக்கும். சமையலறையில் நிறைய பண்ட பாத்திரங்களை வாங்கி நிரப்ப வேண்டும். சில பேருக்கு அழகுப் பொருட்கள் மீது ஆசை இருக்கும். சிலருக்கு நிறைய புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆசை கூட இருக்கும். உங்களுடைய ஆசை எப்படிப்பட்ட ஆசையாக இருந்தாலும் சரி, அந்த ஆசை நிறைவேற, நீங்கள் விரும்பிய அந்த ஒரு பொருளை நிறைய வாங்கி சேர்க்க, இந்த ஒரு குச்சியை நீங்கள் விருப்பப்பட்ட பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அது எந்த குச்சி அதை எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றிய விவரங்களை விரிவாக தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

அளவில்லாமல் ஒரு பொருளை பன்மடங்காக பெருக்கக் கூடிய சக்தி அதிமதுர குச்சிக்கு உண்டு. இதை அழகு குறிப்புக்காக அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த குச்சி ஒரு மூலிகை பொருளாகவும் நிறைய மருத்துவ குறிப்புக்காக ஆயுர்வேதத்தில்  பயன்படுத்தப்படுகிறது. ஒரு மரத்தினுடைய குச்சி தான் இந்த அதிமதுர குச்சி. நாட்டு மருந்து கடைகளில் இது நமக்கு மலிவாக சுலபமாக கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாங்கிய அந்த குச்சை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். குச்சி நனையும் அளவிற்கு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் நெய்யை விட்டு குச்சியை அந்த நெய்யில் ஊற வைக்க வேண்டும். இந்த கிண்ணம் பூஜை அறையிலேயே இருக்கட்டும். ஒரு நாள் முழுவதும் நெய்யில் அந்த குச்சி ஊறிய பின்பு, அதிமதுர குச்சியை நெய்யிலிருந்து எடுத்துவிட்டு ஒரு சிறிய துணியில், குச்சியை சுத்தமாக துடைத்துவிட்டு, அந்த குச்சிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து, குச்சிக்கான சக்தியை கொடுத்து விடுங்கள். அதாவது அந்த குச்சிக்கு ஒரு தெய்வீக சக்தி வந்துவிடும்.

தயார் செய்த இந்த குச்சியை அப்படியே பணத்தின் மேல் வைத்தால், உங்கள் வீட்டில் இருக்கும் பணம் இரட்டிப்பாக பெருகிக்கொண்டே செல்லும். ஒரு சொத்து பத்திரத்தின் மேல் வைத்தால் அந்த சொத்து அடமானம் போகாமல் இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் மேலும் மேலும் சொத்து வாங்கக் கூடிய யோகமும் உங்களுக்கு வரும்.

- Advertisement -

குழந்தைகள் படிக்கின்ற புத்தகத்தின் மேல் இந்த குச்சியை வைத்தால் சரஸ்வதி கடாட்சம் உங்களுடைய வீட்டில் பன்மடங்காக பெருக்கும். சமையல் அறையில் இந்த குச்சி வைத்தால் தன தானியத்திற்கு பஞ்சம் வராது. இப்படி உங்களுக்கு விருப்பமான ஏதோ ஒரு விஷயத்திற்காக அந்த பொருளின் மீது இந்த குச்சியை நம்பிக்கையோடு கொண்டு போய் வைத்துப் பாருங்கள். அது பல மடங்கு பெருகி உங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.

ஒரு சிறிய அதிமதுர குச்சியினால் இவ்வளவு நடக்குமா என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை செய்யாதீர்கள். இந்த குச்சியை வைப்பதன் மூலம் உங்களுடைய வீட்டில் எல்லா நல்ல விஷயங்களும் பல மடங்காக பெருகும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

ஒட்டுமொத்தமாக நான்கு அதிமதுர குச்சிகளை எடுத்து நெய்யில் ஊறவைத்து, பின்பு எடுத்து துடைத்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜை செய்து அந்த குச்சிகளை சமையலறையில் ஒன்று, படிகின்ற புத்தகத்தில் ஒன்று, பீரோவில் பணத்தோடு, நகையோடு ஒன்று என்று கூட தனித்தனியாக வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. இந்த குச்சி குறிப்பிட்ட அந்த பொருளை தொட்டபடி இருக்க வேண்டும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லா நல்லதும் உங்களை தேடி வர இந்த ஒரு சின்ன பரிகாரம் போதும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -