இந்த 1 பொருள் யார் வீட்டில் இல்லையோ, அந்த வீட்டுப் பக்கம் அதிர்ஷ்டம் எட்டிக்கூட பார்க்காது. எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன?

virali-manjal
- Advertisement -

காலாகாலத்தில் நமக்கு நடக்க வேண்டிய நல்லது நடக்க வேண்டும் என்றால் நம்மிடம் கட்டாயமாக அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும். ‘எல்லா விஷயங்களும் கைகூடி வருகிறது. ஆனால் ஒரு நல்லது கூட நடக்கவே மாட்டேங்குது’ என்று நிறைய பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். வாசல் வரைக்கும் வரக்கூடிய நல்லது, நமக்கு பலன் தராமல் போவதற்கு என்ன காரணமாக இருக்கும். அதிர்ஷ்டம் என்ற ஒன்று நம் பக்கத்தில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் தான். அதிர்ஷ்டத்தை நம் வசியப்படுத்தி கொள்ள, ஆன்மீக ரீதியாக நிறைய பொருட்கள் இருக்கலாம். ஆனால் அந்த பட்டியலில் மிக மிக முக்கியமான ஒரு பொருளின் மகத்துவத்தைப் பற்றி தான் இன்றைக்கு நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

virali-manjal

நம் எல்லோர் வீட்டிலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டுமென்றால் நாம் எல்லோருடைய வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு பொருள் விரலி மஞ்சள். விரலி மஞ்சள் இல்லாத ஒரு வீடு இருக்கவே கூடாது. விரலிமஞ்சள் இல்லாத வீடு அதிர்ஷ்டம் இல்லாத வீடாக தான் இருக்கும். வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக இரண்டு விரலிமஞ்சள் 2 ஆவது இருக்க வேண்டும்.

- Advertisement -

நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற, நினைத்தது உடனே பலிக்க இந்த விரலிமஞ்சள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 விரலி மஞ்சளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். வலது உள்ளங் கைகளில், இரண்டு விரலி மஞ்சளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

praying-god1

உள்ளங்கைகளில் இருக்கும் விரலி மஞ்சளை அப்படியே உங்கள் விரல்களை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். மூடிய கைகளை உச்சந்தலையில் வைத்து உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லுங்கள். அதன் பின்பு விரலிமஞ்சள் இருக்கும் கையை, நெற்றிப்பொட்டில் வைத்துக்கொள்ளுங்கள். (விபூதி, குங்குமம், பொட்டு வைப்போம் அல்லவா அந்த இடத்தில் சரியாக கையை வைத்துக் கொள்ளுங்கள்.) நெற்றிப்பொட்டில் வைத்து கொண்டு உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு கையை உங்களுடைய நெஞ்சு குழியில் வைத்து கொண்டு கொண்டு உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்ல வேண்டும். ஆக மொத்தம் மூன்று இடங்களில் விரலி மஞ்சள் இருக்கக்கூடிய உங்களுடைய உள்ளங்கைகள் பட வேண்டும். (உச்சந்தலை, நெற்றிப்பொட்டு, நெஞ்சுக்குழி) இப்படி தினந்தோறும் உங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் வைத்து வழிபாடு செய்து வந்தாலே, நிறைவேறாத ஆசைகள் கனவுகள் எதுவாக இருந்தாலும் அது கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.

hand

உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கூடிய அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்க கூடிய சக்தி இந்த விரலி மஞ்சளில் அடங்கியுள்ளது. எப்போதும் இரண்டு விரலி மஞ்சளை பூஜை அறையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.

praying-vilakku

இப்படி எல்லாம் வேண்டுதல் வைக்க எங்களுக்கு தெரியாது என்று சொன்னாலும் பரவாயில்லை. தினமும் தீபம் ஏற்றும் போது, பூஜை அறையில் இருக்கும் விரலி மஞ்சளை உங்களுடைய விரல்களால் தொட்டு, ‘என் குடும்பம் எப்போதும் சந்தோஷமாகவும், சீரும் சிறப்புமாகவும் இருக்க வேண்டுமென்று’ வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். வாழையடி வாழையாக பல தலைமுறைகளுக்கும் உங்கள் குடும்பம் செழிப்பாக இருக்க, அதிர்ஷ்டம் உங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாக நிற்க இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -