யானையின் காலடி மண்ணைத் தொட்டவர்கள், பல கோடிக்கு அதிபதியாகலாம். கடவுளுக்கு மட்டுமே சொந்தமான இந்த யானைக்குப் பின்னால், இவ்வளவு பெரிய விஷயம் இருக்குதா?

elephant
- Advertisement -

கஜமுக கணபதி, முழு முதற்கடவுளான அந்த விநாயகரின் மறு உருவம் தான் இந்த யானை. இந்த யானையைப் பற்றி பலவிதமான ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால், யானையைப் பற்றி தெரியாத அறிய இன்னும் பல தகவல்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்புகள் எல்லாம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையில் பதிவை தொடருவோம் வாருங்கள்.

அதிர்ஷ்டம் தரும் யானை பற்றிய குறிப்புகள்:
பொதுவாகவே யானையின் முகத்தில் விழித்தால் நல்லது என்று சொல்லுவார்கள். யானை என்றால் நிஜ யானையை வாங்கி வைத்து நம்மால் வளர்க்க முடியாது. ஆகவே யானை பொம்மைகளை வீட்டில் வைத்தால் நல்லது. இந்த விஷயம் நாம் எல்லோருக்கும் தெரியும். ஆண் யானை, பெண் யானை என்று இரண்டு உள்ளது அல்லவா. ஆண் யானை பெண் யானை இந்த இரண்டையும் ஜோடியாக வாங்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

ஆண் யானை சிலையின் முகத்தில் விழித்து விட்டு சென்றாலோ அல்லது நீங்கள் வெளியே செல்லும்போது நிஜ ஆண் யானையை பார்த்துவிட்டு அதன் பிறகு ஒரு முக்கியமான வேலைக்கு சென்றாலோ, நடக்காத நல்ல காரியம் கூட நடந்து விடும். அதேபோல பெண் யானை முகத்தில் விழித்தால், அல்லது நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பு, உங்களுக்கு நிஜப் பெண் யானையின் தரிசனம் கிடைத்தாலோ உங்கள் மனதில் நினைத்தது அப்படியே நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

உங்களுடைய வீட்டின் அருகில் ஏதாவது ஒரு பெரிய கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் யானை வளர்த்து வருகிறார்கள் என்றால், தினமும் அந்த யானையை பார்த்துவிட்டு, அதற்கு சாப்பிட உங்களால் முடிந்த வாழைப்பழம், தேங்காய், கரும்பு, ஏதாவது ஒன்று உங்களால் முடிந்தது வாங்கி கொடுக்கலாம். தினமும் நிறைய தீனி வாங்கி கொடுக்கக்கூடிய சக்தி நமக்கு இருக்காது. ஒரு வாழைப்பழம் கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் பெற்று சென்றால் கூட மிக மிக நல்லது.

- Advertisement -

யானையில் காலடி மண் கிடைத்தால் நீங்கள் தான் யோகக்காரர்கள். யானையின் காலடி மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதில் சிறிதளவு மஞ்சள் தண்ணீர் தெளித்து, காயவிட்டு பின்பு, ஒரு மஞ்சள் துணியில் அந்த மணலை கொட்டி கட்டி, நிலை வாசலில் கட்டி விட்டால் உங்கள் வீட்டிற்குள் அந்த கஜமுக ஆஞ்சநேயரே வந்ததாக அர்த்தம். வீட்டில் செல்வ கடாட்சம் நிறைவாக இருக்கும். பிறகு நீங்க தாங்க லட்சாதிபதி. வீட்டிற்குள் ஏதாவது யோகம் வந்து கொண்டே இருக்கும். கோடியில் புரளும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லைங்க.

இதையும் படிக்கலாமே: ஏழு வாரம் இந்த மரத்தை சுற்றி வந்தால் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் தீரும். அந்த சிவபெருமானே நம் வீட்டிற்குள் குடி வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

யானையின் லத்தி என்று சொல்லுவார்கள் அல்லவா. யானையின் சாணம். அதை எடுத்து பசு மாட்டு சாணம் போலவே வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்கு காய்ந்து வறட்டி கிடைத்திருக்கும். ஆனால் இது பசு மாட்டு சாணம் அல்ல. யானை சாணத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற வரட்டி. இந்த காய்ந்த யானை சாணத்தை, சாம்பிராணி தூபம் போடும்போது கொஞ்சமாக அதில் கலந்து விட்டால், அதனுடைய புகை வீடு முழுவதும் நிரம்பி இருந்தால், வீட்டை துர் சக்திகள் அண்டாது. வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால் அவர்களை நோய் நொடிகள் அண்டாது. வீட்டில் கண் திருஷ்டி குடி கொள்ளாது.

- Advertisement -