ஏழு வாரம் இந்த மரத்தை சுற்றி வந்தால் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் தீரும். அந்த சிவபெருமானே நம் வீட்டிற்குள் குடி வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

sivan
- Advertisement -

படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலில், இந்த அழிக்கக்கூடிய வேலையைத்தான் சிவபெருமான் செய்வதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மும்மூர்த்திகளின் வடிவமாக திகழ்பவர் சிவபெருமான். அவர் எதை அழிப்பார் தெரியுமா. நம்மிடம் இருக்கும் ஆணவம், கர்வம், கோவம், தலைகனம், நாம் செய்த பாவம், நோய் நொடி, இவைகளை தான் அழிப்பாரே தவிர, நம்மை அழிக்கக்கூடிய வேலையை என்றைக்குமே அந்த சிவபெருமான் பார்த்ததில்லை. வழக்கம் போல நாம் இதையும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே அழித்தல் தொழிலுக்கு உண்டான கடவுள் சிவபெருமான் என்று இனி சொல்லாதீங்க. எம்பெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறவும், நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரவும், ஏழேழு ஜென்மத்து பாவத்தை கழிக்கவும், அந்த சிவபெருமானை வீட்டிற்குள் வர வைக்கவும் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சிவன் ஆசீர்வாதத்தை பெற ஏற்ற வேண்டிய தீபம்:
சிவனுடைய ஆசிர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் வரக்கூடிய பிரதோஷ தினத்தில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். சிவன் கோவிலில் இருக்கும் வில்வ மரத்தை ஏழு முறை வலம் வர வேண்டும். ஒரு வில்வ காயை வாங்கி இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு வில்வ காயில் தீபம் ஏற்றி, வில்வ மரத்துக்கு அடியில் வைத்து சிவபெருமானை மனமுருகி வேண்டி வரங்கள் கேட்டால், அந்த வரங்கள் உடனே கிடைக்கும். குறிப்பாக திருமணமாகாதவர்கள் ஏழு வாரம் திங்கட்கிழமை, வில்வ மரத்தின் அடியில், வில்வ காயில் தீபம் போட்டால், ஏழு வாரம் முடிவதற்குள் உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

ஏழு முறை வில்வ மரத்தை தினமும் சுற்றி வந்தால் கூட தவறு கிடையாது. வில்வ மரத்தை சுற்ற சுற்ற நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் தீரும். ஏழேழு ஜென்மத்து பாவத்தை சுமந்து கஷ்டப்படுபவர்களுக்கு கூட சுலபமாக மோட்சம் கிட்டும். குறிப்பாக பிரதோஷ தினத்தன்று வில்வ மரத்தை வளம் வந்தால் எந்த நவகிரக தோஷமும் நம்மை தாக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஒரு வில்வ காயை எடுத்து வந்து அதன் மேலே மஞ்சள் பூசி, விபூதி பட்டையை போட்டு, ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். வீட்டில் மூன்று நாட்களுக்குள் நடக்காத நல்லது எல்லாம் கூட நடந்து விடும். வீட்டை பிடித்த பீடை நீங்கிவிடும். தரித்திரம் நீங்கும். வீட்டில் செல்வ கடாட்சம் ஐஸ்வரியம் பிறக்கும். எப்போதுமே நோய் நொடியோடு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுடைய குடும்பம் கூட ஆரோக்கியம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிவபெருமானின் அருள் ஆசியை முழுமையாக பெற வேண்டுமா. சிவபெருமான் உங்கள் வீட்டிற்குள் வர வேண்டுமா. தினமும் நெற்றியில் திருநீறு பூசுங்கள். கழுத்தில் ருத்ராட்சம் கட்டிக் கொள்ளுங்கள். மனதிற்குள் சிவ சிவ என்ற நாமத்தை சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: மறந்தும் கூட இந்தப் பொருட்களை அன்பளிப்பாக கூட கொடுத்தோ வாங்கியோ வாங்கி விடாதீர்கள். இது வரை நீங்கள் சேர்த்து அதிஷ்டம் தான, தர்மம் அனைத்தும் உங்களை விட்டு போய் விடும்.

வில்வ இலையை உங்களால் முடிந்த வரை வாங்கிக் கொண்டு போய் சிவன் கோவிலுக்கு கொடுங்கள். உங்களுடனே சிவபெருமான் உங்களுக்குள், உங்கள் வீட்டிற்குள் குடி கொள்வார் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -