அதிர்ஷ்டம் பெருக செய்ய வேண்டிய தானம்

luck
- Advertisement -

நம் அனைவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று வருந்தக்கூடிய நிலை உண்டாகி இருக்கும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை அதனால் தான் இது கிடைக்கவில்லை என்ற எண்ணமும் இருக்கும். அதே சமயம் அதிர்ஷ்டம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்று நினைத்த செயல்களும் இருக்கும். இப்படி அதிர்ஷ்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்கக்கூடிய செயல்களை நடத்துவதற்கு செய்யக்கூடிய தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக தானம் செய்வது என்பது நம்முடைய கர்மாக்களை குறைக்க உதவுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எப்படி தெய்வீக சக்தி நம்மிடம் வருவதற்கு நமக்கு கர்ம வினைகள் தடையாக இருக்கிறதோ அதே போல் தான் அதிர்ஷ்டமும் நம்மிடம் வருவதற்கு நம்முடைய கர்ம வினைகள் தடையாக இருக்கும். அந்த கர்ம வினைகளை நீக்குவதற்கு நாம் செய்யக்கூடிய எளிய தானத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த தானத்தை நாம் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இந்த தானத்தை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு இந்த மூன்று கிழமைகளில் மட்டும்தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தால் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என்று தொடர்ந்து மூன்று தினங்களும் தானம் செய்து விட வேண்டும்.

அதேபோல் எந்த கிழமையில் எந்த நேரத்தில் நாம் தானம் செய்கிறோமோ அதே நேரத்தில் தான் மற்ற கிழமையிலும் தானம் செய்ய வேண்டும். சரி இப்பொழுது எந்த பொருளை தானம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். நாம் தானம் செய்ய வேண்டிய இரண்டு பொருட்கள் குண்டு வெல்லம் மற்றும் வெள்ளை கொண்டை கடலை. இவை இரண்டும் அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும் என்பதால் இவற்றை வாங்குவதில் நமக்கு சிரமம் இருக்காது.

- Advertisement -

குண்டு வெல்லம் 100 கிராம் வாங்க வேண்டும். அதைவிட கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது. அதேபோல் குண்டு வெல்லம் தான் வாங்கி தர வேண்டுமே தவிர்த்து அச்சு வெல்லம் வாங்கி தரக்கூடாது. அடுத்ததாக வெள்ளை கொண்டை கடலை 300 கிராம் வாங்க வேண்டும். இதுவும் அளவில் சரியாக இருக்க வேண்டும். மேலும் வெள்ளை கொண்டை கடலையை தான் தர வேண்டுமே தவிர்த்து கருப்பு கொண்டை கடலையை தரக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பொருட்களையும் தனித்தனியாக பொட்டணம் செய்து ஒரே நபரிடம் கொடுக்க வேண்டும். வீட்டில் வேலை செய்பவராக இருக்கலாம் அல்லது வறுமை நிலையில் இருப்பவராக பார்த்தும் கொடுக்கலாம். இவ்வாறு பிறரிடம் கொடுக்க தயக்கமாக இருக்கும் சூழ்நிலையில் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று மடப்பள்ளியில் தானமாக இதை தரலாம்.

இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டம் நீங்க வழிபாடு

இவ்வாறு தொடர்ந்து மூன்று கிழமைகள் நாம் செய்வதன் மூலம் நம்மிடம் இல்லாத அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதோடு மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தால் நடக்கக்கூடிய செயல்களும் இனிதே நடைபெறும்.

- Advertisement -