வீட்டுக்கு முன்னாடி இந்த செடி எல்லாம் இருந்தா திடீர் திடீர்னு அதிர்ஷ்டங்கள் வருமாம் உங்களுக்கும் தெரியுமா?

arali-malli
- Advertisement -

நம் வீட்டை சுற்றிலும் தாவரங்கள் இருந்தாலே அதிர்ஷ்டம் தான் என்கிறது சாஸ்திரங்கள். ஆனால் எல்லா செடிகளும் நன்மை செய்பவையா? என்று கேட்டால் கிடையாது! இந்த உலகில் நல்லவை என்று ஒன்று இருந்தால், கெட்டவை என்றும் ஒன்று இருக்கும். அதே போல தாவரங்களிலும் நல்ல ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய தாவரங்களும், கெட்ட ஆற்றல்களை வெளியிடக்கூடிய தாவரங்களும் உண்டு. இதை அறிந்து வளர்த்தால் தான் நமக்கு நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் வீட்டிற்கு முன்னால் இருக்கும் இந்த செடிகள் நமக்கு திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியான செடிகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சில வகையான செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கூறுவார்கள். கள்ளிச்செடி, முட்செடி, எலுமிச்சை மரம், அத்தி, அரச, ஆலம், வில்வம் போன்றவற்றையெல்லாம் வீட்டில் வைத்து வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். இத்தகைய செடிகள் சிலவை தெய்வம்சம் பொருந்தியதாகவும், சிலவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக் கூடியதாகவும் உள்ளன. எனவே இவ்வகையான செடிகளை வீட்டில் கண்டிப்பாக வளர்க்க கூடாது. இது நமக்கு வர வேண்டிய அதிர்ஷ்டங்களை தடை செய்கிறது.

- Advertisement -

வீட்டிற்கு பின்புறம் வாழை, முருங்கை போன்றவற்றை வளர்ப்பது நல்லது. இதை முன்புறம் வளர்ப்பது நல்லதல்ல என்று கூறுவார்கள். வாழை மிக எளிதாக சரிந்து விழக் கூடியது என்பதால் குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் இருப்பது ஆபத்து என்பதால் முன்புறம் வைத்து வளர்க்கக்கூடாது என்று அக்காலத்தில் கூறுவார்கள். அதே போல முருங்கை மரத்தையும் அப்படி கூறுவது உண்டு. முருங்கை மரத்தில் கம்பளி பூச்சிகள் அதிகம் இருக்கும் என்பதாலும், மேலும் அதன் கிளைகள் மெல்லியதாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஓடிந்து விடும் என்பதாலும் இவ்வாறு கூறப்படுவது உண்டு.

முன்புறம் வளர்க்கும் செடிகள் ரொம்பவும் சிறப்பம்சமாக கூறப்பட்டுள்ளது. கற்றாழை செடி, துளசி செடி, செம்பருத்தி செடி, குண்டுமல்லி, மல்லி, மருதாணி செடி, மாதுளை, நெல்லி ஆகியவற்றை வீட்டிற்கு முன்புறம் வளர்த்து வந்தால் அதிர்சங்கள் குவியும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய செடிகளை இருக்கும் இடத்தில் வைத்தாவது உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

எப்பொழுதுமே எந்த ஒரு செடியையும் வாசலுக்கு நேரே வைத்து வளர்க்கக்கூடாது. ஒதுக்கு புறமான இடங்களில் வைத்து வளர்க்க வேண்டும். வெற்றிலை கொடி வளர்ப்பது ரொம்பவும் விசேஷமானது ஆனால் வெற்றிலையை தனியாக வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். ரோஜா செடி மற்ற குரோட்டன்ஸ் செடிகள், முல்லை, ஜாதி, கனகாம்பரம், அரளி, பொன் அரளி போன்றவற்றை சேர்த்து வளர்ப்பது ரொம்பவும் நல்லது. பொன்னரளி செடி மற்றும் செவ்வரளி செடி போன்றவற்றை வீட்டிற்கு முன்புறம் வளர்த்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் என்று ஒரு கூற்று உண்டு.

இது தனியாக வளர்க்கும் பொழுது கூறப்படுவது உண்டு. எனவே இவற்றுடன் வேறு சில செடிகளையும் சேர்த்து வளர்த்தால் எந்த ஒரு தோஷமும் இல்லை. மாதுளை மற்றும் நெல்லி போன்றவை மகாலட்சுமியின் அம்சங்களாக கருதப்படுகின்றன எனவே இத்தகைய செடிகளை கண்டிப்பாக வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும். காலையில் எழுந்ததும்‌ முதல் வேலையாக இத்தகைய செடிகளை பார்த்து கண்விழிப்பது அன்றைய நாளை வெற்றியாக்கி கொடுக்கும், யோகம் வரும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -