வீட்டில் எந்தெந்த பொருட்கள் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி ஓடிவரும் தெரியுமா? அதிர்ஷ்டம் தரும் அற்புத பொருட்கள்!

hundi-lakshmi
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான பொருட்களும், உபகரணங்களும் வைத்திருப்போம். ஒருவர் வீட்டில் உள்ளது போல் இன்னொருவர் வீட்டில் இருப்பது இல்லை. அவரவர்கள் மனம் விரும்பிய பொருட்களை அவர்களுடைய இல்லங்களில் வாங்கி வைப்பது உண்டு. அப்படி வாங்கி வைக்கும் சில பொருட்களில் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அற்புத பலன்கள் உண்டு. இதில் வாஸ்து மற்றும் ஆன்மீகம் இரண்டும் தனித் தனியாகப் பார்க்கப்பட வேண்டும். ஒரு சில வாஸ்து பொருட்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பார்கள். அது வாஸ்து ரீதியாக கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டம் ஆகும். ஆனால் ஆன்மிக ரீதியாக கொடுக்கக்கூடிய அதிர்ஷ்ட பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

fish

ஆன்மீக ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் இந்த ஒரு பொருளை வீட்டில் வைத்திருந்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டும். வண்ண வண்ண மீன்களும், சொர்ண வண்ண மீனும் உங்கள் இல்லத்தில் வளர்த்து வந்தால் உங்களுக்கு கிடைக்க கூடிய அதிர்ஷ்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சில விஷயங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கூறுவார்கள். அது போல் உள்ள ஒரு நிலைமை இந்த மீன் வளர்ப்பவர்களுக்கு வருவதில்லையாம். சிறிய சிறிய வண்ண மீன்களும், கோல்டன் ஃபிஷ் என்று சொல்லப்படும் சொர்ண வண்ண மீன் வளர்ப்பதும் பேரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதிலிருந்து ஒரு மீன் இறந்து போனால் கூட அது உங்களுக்கு வந்த ஆபத்தை எடுத்துக் கொண்டதாக அர்த்தமாகிறது.

- Advertisement -

அடுத்ததாக ஒரு வீட்டில் இசைக்கருவிகள் வைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பியானோ, வயலின், வீணை, தம்புரா, நாதஸ்வரம் போன்ற பழம்பெரும் இசை கருவிகளை வாசிக்க தெரியாவிட்டாலும் வீட்டில் வைத்திருந்தால் போதும் அவ்வளவு நல்ல அதிர்ஷ்டங்கள் வருமாம். இசைக் கருவிகளை வாங்க முடியாவிட்டால் அதன் படத்தையாவது வரவேற்பறையில் ஒட்டி வைப்பது நல்ல அதிர்ஷ்ட பலனைகளைக் கொடுக்கும். இசைக் கருவிகளுக்கு அவ்வளவு ஒரு மகத்துவமான ஆற்றல் உண்டு.

veenai

வீட்டில் எப்போதும் ஒரு உண்டியல் வைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அது எந்த வகையான உண்டியலாக இருந்தாலும் சரி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் உண்டியல் வைத்திருப்பது என்பது அதிர்ஷ்டம் தான். அதில் குபேரன் உண்டியல், யானை வடிவிலான உண்டியல், மூஞ்சூறு உண்டியல், பன்றி வடிவ உண்டியல், விநாயகர் உண்டியல், மகாலட்சுமி உண்டியல், மண் உண்டியல் போன்றவை பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இதில் சேர்க்கப்படும் பணமானது மென்மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். உங்களிடம் இல்லை என்றால் இதில் ஏதாவது ஒன்றை வாங்கி சேகரித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்.

- Advertisement -

நீங்கள் ஒருவருக்கு பரிசளிப்பதாக இருந்தாலும், அடுத்தவர்கள் உங்களுக்கு கொடுத்த பரிசாக இருந்தாலும் அது வெள்ளியாலான ஏதாவது ஒரு சுவாமி சிலை விக்கிரகமாக இருந்தால் அதிர்ஷ்டம் மென்மேலும் பெருகும். குழந்தைகளுக்கு வெள்ளி பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். திருமணத்திற்கு குங்குமச்சிமிழ், விளக்குகள் போன்றவற்றை வாங்கி கொடுப்பார்கள்.

murugan

அது போல் அல்லாமல் சுவாமி விக்ரகங்களாக சிறிய அளவில் உங்களிடம் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம் ஆனது படிப்படியாக முன்னேற்றம் காணும். தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் அடைந்தவர்கள் இது போல் வெள்ளி விக்கிரகங்களை வைத்து பூஜை செய்தால் மீண்டும் நலிவடைந்த தொழில் விருத்தி அடையும். இந்த பொருட்களெல்லாம் வீட்டில் வைத்திருந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டம் கட்டாயம் பெருகும் என்பது ஐதீகம்.

- Advertisement -