உங்க வீட்டில் இந்த மரம் எல்லாம் இருக்கிறதா? அப்படினா இதையெல்லாம் கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க!

karuvepilai-lakshmi-vazhai
- Advertisement -

மரம் என்பது இயற்கையோடு ஒன்றிய விஷயமாக இருக்கிறது. நம்மை சுற்றி மரங்களும், செடிகளும் இருந்தால் அது நம்மை மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் உணர வைக்கிறது. மேலும் அது தரும் பலன்களும் அதிகமாக இருக்கிறது. வீட்டை சுற்றி பசுமை இருந்தால் வாஸ்து தோஷங்கள் அண்டாது. ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான விஷயங்களும் மரங்களுக்குள் அடங்கியுள்ளன. இப்படியான மரத்தை வீட்டில் வளர்க்கும் பொழுது சில விஷயங்களை கவனித்து பார்ப்பது நல்லது. அப்படியான விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் கறிவேப்பிலை மற்றும் பப்பாளி மரத்தை வளர்ப்பது ரொம்பவும் நல்லது. அதில் கருவேப்பிலை மரம் ஆண் என்றும், பப்பாளி மரம் பெண் என்றும் வகைப்படுத்தப்படுவது உண்டு. எனவே இம்மரங்களை வளர்ப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக அதை பராமரிக்க வேண்டும். ஒரே வீட்டில் பப்பாளி மற்றும் கருவேப்பிலை மரம் இருந்தால் ரொம்ப நல்லது என்று கூறுவார்கள். மேலும் இம்மரங்களை வாட விடக்கூடாது. இம்மரங்கள் வாடினால் வீட்டில் துன்பம் வரும் என்று கூறுவது உண்டு.

- Advertisement -

வீட்டை சுற்றிலும் எங்கும், எந்த இடத்திலும் முட்கள் நிறைந்துள்ள செடிகளை வளர்க்கக்கூடாது. கள்ளிச்செடி, விஷச்செடிகள், முட்செடிகள், அழகுக்காக வளர்க்கக்கூடிய முட்கள் உள்ள செடிகள் கூட வீட்டில் வளர்ப்பது முறை அல்ல! இது வரக்கூடிய பணத்தை தடை செய்யும் என்பது பலனாக கொடுக்கிறது. எனவே வீட்டில் பணம் குறையும், வருமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இச்செடிகளை கவனித்து அவ்வப்பொழுது அகற்றி விடுங்கள்.

வாழை மரம், தென்னை மரம் போன்றவற்றை வீட்டில் வளர்ப்பது ரொம்பவும் நல்லது. இது அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் இருக்கும் வறுமையை நீக்கும். உங்களுக்கு வரக்கூடிய துன்பத்தை கூட, அது தனக்குள் ஈர்த்துக் கொண்டு நமக்கு வர இருக்கும் பேராபத்தில் இருந்து பாதுகாக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த வாழை மரம் மற்றும் தென்னை மரத்தை ஒற்றையாக வளர்க்கக்கூடாது. வாழைமரம் குலை தள்ளும் எனவே பிரச்சனை இல்லை ஆனால் தென்னை மரத்தை தனியாக வைக்க கூடாது. தென்னம்பிள்ளையுடன் சேர்த்து வைக்கும் பொழுது தான் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் குவியும்.

- Advertisement -

வாஸ்துபடி நீங்கள் வீட்டை அமைக்காவிட்டால் வாஸ்து சாஸ்திரப்படி தோஷங்கள் ஏற்படுவதாக நம்பப்பட்டு வருகிறது. இது போன்ற வாஸ்து ரீதியான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள், விநாயகருக்கு உகந்த இந்த செடிகளை வீட்டின் எல்லைக்குள் வளர்த்து வாருங்கள். இது உங்களுடைய வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து, தோஷங்களை நீக்கி அதனால் வரக்கூடிய துன்பங்களையும் குறைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் பிள்ளையாருக்கு உகந்த தும்பை, சாமந்தி, பாதிரி, முல்லை, ஜாதி, தாமரை, மல்லிகை போன்ற பூச்செடிகளை உங்களுடைய வீட்டின் எல்லைக்குள் எங்கு வைத்து வளர்த்தாலும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும், வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

அது மட்டும் அல்லாமல் தாமரை வளரக்கூடிய அமைப்பு உங்கள் வீட்டில் இருந்தால் அதுவும் அதிர்ஷ்டம் தான். தாமரையில் அமர்ந்துள்ள மகாலட்சுமியின் அருளை கொடுக்கக்கூடிய இந்த தாமரை மலர்கள் குளம் போல அமைத்து வீட்டிற்குள் இருந்தால் செல்வ வளமும், பெருஞ்செல்வமும் சேரும் என்கிற ஐதீகமும் உண்டு. இதற்கெல்லாம் இப்போது இடமில்லாமல் போய்விட்டது. வீட்டில் எப்பொழுதும் உருளி போன்ற அமைப்பை உருவாக்கி உங்கள் வீட்டில் வளரும் பூக்களை ஃப்ரஷ் ஆக ஒவ்வொரு நாளும் பறித்து அதில் போட்டு வைத்தால் எல்லா வகையான பிரச்சனைகளும் உங்களை விட்டு ஓடி செல்லும். திருஷ்டிகள் கழிந்து, சுப பலன்கள் அதிகம் உண்டாகும் என்பது நியதி!

- Advertisement -