எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தரும் தாயத்து.

murugan
- Advertisement -

எதிர்பாராத அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் கிடைக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருந்திருப்பாங்க. ஆனால், எதிர்பாராத சமயத்தில் திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைத்து விடும். மாதம் பல ஆயிரக்கணக்கில் சம்பளம். அடுத்த மாதத்தில் இருந்து நான் ராஜா தான். இந்த வேலை எனக்கு கிடைத்தது முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தால் தான் என்று சொல்பவர்கள்.

தொழில் செய்ய கடனுக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். கூடுதல் வட்டிக்கு கூட பணம் கொடுக்க எல்லோரும் மறுத்து விட்டார்கள். ஆனால் திடீரென்று இன்று பேங்கில் குறைந்த வட்டியில் எனக்கு லோன் சேங்க்ஷன் ஆகிவிட்டது. நான் நினைத்தபடி தொழில் தொடங்கப் போகின்றேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒருவருக்கு அடிப்பது என்பது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம் தான். ஆனால் பல பேருக்கு இந்த அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்கக்கூடிய பாக்கியம் இருக்காது. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. துரதிஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கும். இந்த அதிர்ஷ்ட காற்றை நம் பக்கம் வீசவைக்க ஒரு தாந்திரீகம் சார்ந்த எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

அதிர்ஷ்டம் தரும் தாயத்து

இந்த தாயத்தை தயார் செய்ய நமக்கு பவளமல்லி செடியின் வேர் கட்டாயம் தேவை. பச்சை குன்றின்மணி 2, பச்சை நூல் சின்ன துண்டு, எடுத்துக்கோங்க. பூமியிலிருந்து எடுத்த வேரை மஞ்சள் தண்ணீரால் கழுவி நிழலிலேயே உலர வைத்து விடுங்கள். பிறகு அந்த வேர் வெளியே தெரியாத அளவுக்கு இந்த பச்சை நூலை வைத்து சுற்றி விட வேண்டும்.

- Advertisement -

சின்னதாக இதை நீங்கள் தயார் செய்யணும். ஒரு தாயத்துக்கு உள்ள இந்த வேர் போகும் படி தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு தாயத்து வாங்கிக்கோங்க. வெள்ளி தாயத்தாக இருந்தால் சிறப்பு. முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சாதாரண சில்வர் தாயத்து வாங்கி அதற்கு உள்ளே முதலில் 2 பச்சை குன்றின்மணி போட்டு, அதன் பிறகு இந்த வேரை வைத்து, கொஞ்சமாக அதன் உள்ளே பச்சை குங்குமம் போட்டு மூடி, பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி, இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லி அந்த தாயத்துக்கு உரு ஏற்றிக் கொள்ளுங்கள்.

ஏதாவது ஒரு தெய்வத்தின் நாமத்தை சொல்லி தாயத்துக்கு சக்தி கொடுங்கள். மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். ஓம் நமசிவாய, சரவணபவ, ஓம் முருகா, ஓம் சக்தி, இப்படி என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். 108 முறை ஒரு தெய்வத்தின் நாமத்தைச் சொல்லி அந்த தாயத்தை எடுத்து ஒரு பச்சை கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அல்லது செயினில் கட்டிக் கொள்ளலாம். அல்லது பெண்கள் தங்களுடைய தாலி சரடில் கூட ஒரு பச்சை கயிறால் கட்டி தொங்கவிட்டு கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: குடும்ப நன்மைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

இடுப்பில் இந்த தாயத்தை கட்டிக் கொள்ளக் கூடாது. கைக்கு மேல் பக்கம் புஜம் என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த இடத்திலும் இந்த தாயத்தை ஆண்கள் கட்டிக் கொள்ளலாம். இந்த தாயத்து எதிர்பாராத அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விடும். அந்த அதிர்ஷ்டம் பணவரவாகவும் மாறும். 48 நாட்கள் கழித்து இதற்கு உள்ளே இருக்கும் பொருட்களை கட்டாயம் மாற்ற வேண்டும். தாயத்துக்கு 48 நாள் மட்டும் தான் பவர். தேவைப்படுபவர்கள் இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -