குடும்ப நன்மைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

parigtham
- Advertisement -

பொதுவாகவே பச்சை பசேல் என வளர்ந்து நிற்கும் செடிகளை பார்க்கும் போது நமக்கு மனதில் லேசான சந்தோஷம் இருக்கும். அந்த பச்சை நிறத்தை பார்க்கும் போது மனதிற்கு ஒரு நிம்மதியும் கிடைக்கும். அதனால் தான் வீட்டில் இருக்கக்கூடிய சின்ன இடத்தில் ஓரிரு செடிகளையாவது வைத்து வளர்க்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அது மட்டுமல்லாமல் செடி வளர்ப்பது நம்முடைய ஆரோக்கியத்துக்குமே நன்மை தரக்கூடிய ஒரு விஷயம்தான். அந்த வரிசையில் இன்று நம் குடும்பத்திற்கு நன்மையை மட்டுமே தரப்போகும் ஒரு அரிதான செடியை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குடும்பத்தில் நல்லது மட்டுமே நடக்க, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க, குடும்பம் ஒற்றுமையாக இருக்க, நம் வீட்டில் வைக்க வேண்டிய அந்த ஒரு செடி என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குடும்ப நன்மைக்கு பரிகாரம்

குடும்ப ஒற்றுமைக்கு உங்களுடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிய செடி, பாரிஜாத செடி. பெரும்பாலும் இது எல்லோர் வீட்டிலும் இருக்காது. ஆனால் நர்சரியில் கேட்டு வாங்கி உங்களுடைய வீட்டில் தொட்டியிலும் வளர்க்கலாம். அப்படி இல்லை நிலத்திலேயே வைக்க இடம் இருக்கிறது என்றால் அங்கேயும் வைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வரலாம்.

இந்த செடியில் அவ்வளவு எளிதில் பூக்களானது பூக்காது. ஆனால் நம்பிக்கை இழக்காமல் குடும்ப ஒற்றுமைக்காக இந்த செடியை வீட்டில் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தினம் தினம் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது இந்த செடி வளர்ப்பது போல குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும், செல்வ வளமும் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும். குடும்பத்தில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைத்து இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள்.

- Advertisement -

இந்த செடியிலிருந்து பூக்கள் பூக்க தொடங்கி விட்டால், அந்த பூக்களை பறித்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு வைத்து வேண்டுதல் வைக்கும் பட்சத்தில் உங்களுடைய வேண்டுதல் ஆனது சீக்கிரம் பளிக்கும். குடும்பத்தில் நல்லது மட்டுமே நடக்க தொடங்கி விடும். பிறகு கெட்டது நடப்பதற்கு வாய்ப்பே இருக்காது.

அதாவது எதிர்பாராத சூழ்நிலையில் சண்டை வந்து கணவன் மனைவிக்குள் பிரிவு அல்லது வீட்டில் சதா சண்டை சச்சரவுகள் போன்ற பிரச்சனைகளுக்கு இடமே இருக்காது. அது மட்டுமல்லாமல் எதிர்பாராத இழப்புகளும் உங்களுடைய குடும்பத்தில் ஏற்படாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, எதிர்பாராமல் அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி, மனபயம் நீங்க பரிகாரம்

அத்தனை சக்தி வாய்ந்த நேர்மறை ஆற்றல் நிறைந்த, குரு அம்சம் பொருந்திய செடிதான் இந்த பாரிஜாத செடி. ஒருமுறை உங்கள் வீட்டில் வைத்த பாரிஜாத செடியில் பூ மலர்ந்து விட்டால் போதும். தினம் தினம் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் வளர போகிறது என்று அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பாருங்கள். குடும்பத்தில் நிறைவான சந்தோஷத்தை பெறுங்கள்.

- Advertisement -