யோகம் வர பரிகாரம்

poojai arai vasal thanneer
- Advertisement -

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் நாம் இறைவழிபாடு செய்வது அன்றைய நாள், அந்த மாதம், அந்த வருடம் நல்ல முறையில் அமையவே. இதை பெரும்பாலும் ஒவ்வொரு வருடம் பிறக்கும் போது நாம் செய்வது உண்டு. அது தமிழ் வருடமாக இருந்தாலும் சரி, ஆங்கில வருடமாக இருந்தாலும் சரி, அன்றைய நாளில் நிச்சயம் நம்முடைய வழிபாடுகள் இருக்கும்.

இதையே ஒவ்வொரு மாதம் பிறப்பின் போதும் சில சூட்சம பரிகாரங்களை செய்தால் அந்த மாதம் முழுவதும் யோக காரமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

யோகம் வர பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஜனவரி மாதத்தின் கடைசி நாளான நாளை 31.12. 2024 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு மேல் நாளைய தினம் இரவு 10 மணி வரையில் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்யும் நேரத்தில் ராகு காலம், எமகண்டம் இல்லாமல் இருக்கும்படி மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு டம்ளர் அல்லது சொம்பில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். மேலும் இதில் துளசி இலை, வேப்ப இலை, மருதாணி இலை, நெல்லி இலை, வெள்ளெருக்கு இலை இந்த ஐந்து இலைகளில் உங்களுக்கு எந்த இலை கிடைக்கிறதோ அதில் ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த இலையை இந்த மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு பூஜையறையில் வைத்து உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வம் ஆகியவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வரக்கூடிய பிப்ரவரி மாதம் உங்களுக்கு நல்லபடியாக அமைய வேண்டும். நீங்கள் தொடங்கும் காரியம் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீர் நாளைய தினம் முழுவதும் பூஜை அறையில் இருக்கட்டும். பிப்ரவரி மாதத்தில் முதல் நாள் அதாவது 1.2.2024 வியாழக்கிழமை அன்று காலையில் வாசல் தெளிக்கும் தண்ணீரில் இந்த தண்ணீரை கலந்து தெளித்து விடுங்கள். அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் இந்த தண்ணீரை தொட்டு உங்கள் நிலை வாசல் படிகளை சுத்தமாக துடைத்து விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: கோமதி சக்கர சிறப்புகள்

இந்த பரிகாரம் ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரம் தான், ஆனால் இதை செய்யும் போது பலன் அதிகப்படியாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு யோகங்களும், நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றிகளும், நல்ல பண வரவும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -