கோமதி சக்கர சிறப்புகள்

gomatichakram
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்றால் அவரை சுற்றி இருக்கக் கூடிய தீய எதிர்மறை சக்திகள் விலக வேண்டும். அப்படி எதிர்மறை சக்திகள் விலகவும் அதே சமயம் பணவரவை அதிகரிக்கமும் வாஸ்து ரீதியான பிரச்சனைகள் நீங்கவும் தொட்ட காரியம் துவங்கவும் உதவக்கூடிய ஒரு அற்புதமான தெய்வம்சம் பொருந்திய பொருளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தெய்வாம்சம் பொருந்திய பொருட்கள் நம் வீட்டில் இருக்கும் பொழுது தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட பொருட்கள் இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக பார்க்கும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு என்று பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களில் ஒன்றுதான் கோமதி சக்கரம்.

- Advertisement -

இந்த சக்கரம் நம்முடைய வீட்டில் இருக்கும் பொழுது நமக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வலம்புரி சங்கிற்கு இணையான சக்தியை பெற்றதாக தான் இந்த கோமதி சக்கரம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த கோமதி சக்கரத்தை எந்த முறையில் எப்படி பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

கோமதி சக்கரம் என்பது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய சக்கரங்களை சரியாக இயங்கச் செய்ய உதவுகிறது என்பதால் நாம் நம்முடைய தலையில் வைத்து தியானம் செய்யும் பொழுது சக்கரங்கள் சரியாக இயக்கப்படுகிறது. அதோடு நம்முடைய குழந்தைகள் ஞாபக சக்தி குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அவர்களின் புருவங்களுக்கு நடுவில் இந்த கோமதி சக்கரத்தை வைப்பதன் மூலம் அவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு தெளிவான புத்தியையும் பெறுவார்கள்.

- Advertisement -

தெய்வ அருளை பரிபூரணமாக பெறுவதற்கு நாட்டு மருந்து கடையில் அரகஜா என்ற ஒரு பொருள் கிடைக்கும். இது தெய்வ சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் மிகுந்தது. மேலும் தெய்வ சக்தியை வசியப்படுத்தும் ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது. இந்த அரகஜாவை கோமதி சக்கரத்தின் அடியில் தடவி வீட்டு பூஜை அறையிலோ அல்லது தொழில் செய்யும் ஸ்தாபனத்திலோ வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வாஸ்து ரீதியான பிரச்சினைகள் நீங்கி சிறப்பான பலனை பெறுவதற்கு ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து அது நிறைய தண்ணீரை ஊற்றி அதற்குள் கோமதி சக்கரங்களை போட வேண்டும். பிறகு அதில் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூளை சேர்த்து வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து வர வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் வாஸ்து ரீதியான குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். இதை நாம் தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் தெளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பண பற்றாக்குறையை போக்கும் பொருட்கள்

இந்த முறையில் கோமதி சக்கரத்தை நாமும் நம்பிக்கையுடன் பயன்படுத்தி வரும்பொழுது கண்டிப்பான முறையில் அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் அடைய முடியும்.

- Advertisement -