வீட்டு வரவேற்பறையில் இந்த பொருள்கள் எல்லாம் இருந்தால் திடீர் அதிஷ்டங்கள் உண்டாகி, ராஜ யோக வாழ்க்கை உங்களை தேடி வரும்.

- Advertisement -

எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சூழ்நிலையில் நமக்கு கிடைக்கும் வருமானம் அல்லது ஆதாயத்தை தான் நாம் அதிர்ஷ்டம் என்று சொல்கிறோம். இந்த அதிர்ஷ்டம் நம் வாழ்வில் வந்தால் நாம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வோம். ஆனால் இந்த திடீர் அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் ஏற்படுவது கிடையாது. ஆனாலும் இதை பெறுவதனான சில சூட்சும வழிகள் உள்ளன. அது குறித்து பார்ப்போம் வாருங்கள்.

அதிர்ஷ்டத்திற்கு உரிய கிரகமாக கருதப்படுபவர் சுக்கிரன். அவரை அதிர்ஷ்ட காரகன் என்றும் கூறுவர். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் தொடர்பில் இருந்தால் அந்த ஜாதகத்தை அதிர்ஷ்ட ஜாதகம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு அதிர்ஷ்ட ஜாதகம் இல்லாதவர்கள் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்கென்று சில பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் அதிஷ்டத்தில் பெறலாம்.

- Advertisement -

அதிஷ்டம் வர பரிகாரம்:
குரு பகவானின் காரகனாக விளங்குபவர் வெள்ளை யானை. இந்த வெள்ளை யானையை ஏதாவது ஒரு உலோகத்தில் சிலையாக வாங்கி வந்து நம் வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். அந்த யானை சிலையானது தன் துதிக்கையை தூக்கி ஆசீர்வதிப்பது போல் இருக்க வேண்டும். பொதுவாக அனைத்து உயிரினங்களுக்கும் சூரிய நாடி, சந்திர நாடி என்று இரண்டு நாடிகள் இருக்கின்றன. இவை இரண்டும் ஒரு சேர வரும் பொழுது நாம் என்ன நினைக்கின்றோமோ அது நடந்து விடும் என்று நாடி ஜோதிடம் கூறுகிறது.

அவ்வாறு இரண்டு நாடிகளும் ஒரு சேர வரும் ஒரே உயிரினம் யானை. ஆதலால் தான் கோவில்களில் நாம் யானையை பராமரிக்கிறோம். இதன் காரணம் கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வழிபட்டு விட்டு யானையிடம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது நம் மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும். இதை கருத்தில் கொண்டு தான் குரு பகவானின் காரகனான வெள்ளை யானையை நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும் என கூறுகிறோம்.

- Advertisement -

அடுத்ததாக சுக்கிர காரகன் என்று கருதப்படுபவை வெள்ளை குதிரை மற்றும் காளை மாடு. இந்த வெள்ளை குதிரை மற்றும் காளை மாட்டை சிலையாகவோ அல்லது படமாகவோ வீட்டின் வரவேற்பறையில் வைக்க வேண்டும். இவ்வாறு நாம் வரவேற்பறையில் இந்த சிலைகளை வைப்பதன் மூலம் நமக்கே தெரியாத பல வழிகளில் இருந்து ஏதாவது ஒரு வகையில் பணவரவு ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆதலால் தான் பல அலுவலகங்களில் இந்த சிலைகளை வைத்திருக்கிறார்கள்.

திடீர் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய தெய்வங்களாக கீழ் திருப்பதியில் இருக்கும் பத்மாவதி தாயார் விளங்குகிறார். இந்த பத்மாவதி தாயருக்கு நம்மால் இயன்ற அளவில் வெள்ளியில் தாமரை பூ வாங்கி அதை உண்டியலில் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாளுக்கும் நாம் வெள்ளி தாமரை பூவை உண்டியலில் செலுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் விதியையே மாற்றி அமைக்கக்கூடிய இந்த வழிபாடு பற்றி தெரியுமா? தினமும் ஒரு 5 நிமிடம் இந்த வழிபாட்டை செய்தாலே போதும். உங்கள் தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடும் மகிழ்ச்சியோடும் இருக்கலாம்.

மேற்சொன்ன இடங்களுக்கு செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் அம்பாளுக்கும் இந்த வெள்ளி தாமரை பூவை காணிக்கையாக உண்டியலில் செலுத்தலாம். இதன் மூலம் அதிஷ்டம் நம்மை நோக்கி வரும்.

- Advertisement -