வாழ்க்கையில் ஒரு முறை இந்த விருட்ச பரிகாரத்தை செய்தால் போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருவது உறுதி.

Pary Athimaram
- Advertisement -

நாளெல்லாம் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் நம்மால் ஓரளவுக்கு மேல் முன்னேற முடிவதில்லை. ஒரு சிலர் நம்மை விட குறைவாகவே உழைப்பது போல தோன்றும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே செல்வார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய ஜாதக ரீதியான காரணம் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது முக்கியமான காரணம் தான்.

அப்படியான இந்த அதிர்ஷ்டம் எல்லோரும் வரும் வரை காத்து கொண்டிருந்தால் நாம் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் நடத்த முடியாது. அப்படியானால் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியுமா என்று கேள்வி எழுலாம். நிச்சயமாக நாம் செய்யும் ஒரு சில பரிகாரங்களின் மூலம் அதிர்ஷ்டமானது நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அதிர்ஷ்டம் தேடி வர விருட்ச பரிகாரம்

இயற்கையின் படைப்பான விருச்சகங்களுக்கு தனிப்பெரும் சக்தி உள்ளது. ஒரு விருச்சகம் சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் தழைத்து வளர்ந்தால் அந்த விருச்சகத்திற்கு தெய்வ சக்தி கிடைக்கும் என்று ஆன்மீக சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் இந்த பரிகாரமும் ஒரு விருச்சகத்தை வைத்து தான் செய்ய போகிறோம். அந்த விருட்சகமானது அத்தி மரம்.

இந்த அத்தி மரம் பெரும்பாலும் கோவில்களில் இருக்கும் அல்லது இந்த பரிகாரத்திற்காக நீங்கள் இந்த மரத்தை தேடி பிடிக்க தான் வேண்டும். இந்த பரிகாரத்தை வியாழன் அன்று தான் செய்ய வேண்டும். அன்று காலை குரு ஓரையான ஆறிலிருந்து ஏழு முப்பது மணிக்குள்ளாக செய்ய வேண்டும். அந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் காலை பத்து மணிக்குள் செய்து விட வேண்டும். அதன் பிறகு இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பு வேண்டும். அடுத்து கொஞ்சம் சந்தன வில்லைகள், தண்ணீர் அகல் விளக்கு, நல்லெண்ணெய் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு அத்திமரம் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அத்தியாயத்தின் அடியில் கிழக்கு பார்த்தவாறு அகல் விளக்கு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் கொண்டு சென்றிருக்கும் சோம்பில் தண்ணீரை ஊற்றி சந்தன வில்லைகளை போட்டு கரைத்து அந்தத் தண்ணீரை அத்தி மரத்தின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். அதன் பிறகு இந்த மரத்தை 108 முறை சுற்ற வேண்டும். இது தான் மிகவும் முக்கியம்.

- Advertisement -

இப்படி சுற்றும் பொழுது உங்களுடைய ஆசைகள் தேவைகள் எதுவாக இருப்பினும் அது நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள் எல்லாம் நீங்க வேண்டும் என உங்களுக்கு எது தேவையோ அதை வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை 16 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க ஏழு கிராம்பை வைத்து யாருக்கும் சொல்லாமல் இந்த ரகசிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அவர்களுக்கான மாத விலக்கு காலத்தில் தவிர்த்து விட்டு தொடர்ந்து செய்யலாம். சிலருக்கு 16 வாரங்கள் செய்து முடிப்பதற்குள்ளாகவே அவர்களுடைய எண்ணங்கள் ஈடேறுவதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

- Advertisement -