பண வரவு அதிகரிக்க ஏழு கிராம்பை வைத்து யாருக்கும் சொல்லாமல் இந்த ரகசிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

cash kirambhu
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணம் என்னும் காகிதத்தை நோக்கி எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை மாறி, இன்று பணம் சம்பாதிக்கவே இவற்றையெல்லாம் இழந்தும் நிற்கிறோம். இவையெல்லாம் தெரிந்தாலும் கூட வேறு வழி இல்லாமல் ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

இப்படி ஓடிக் கொண்டே இருந்தாலும் பணம் வருகிறதா என்றால் அதுவும் இல்லை. இன்று கஷ்டப்பட்டு உழைக்கும் அனைவருக்கும் கையிலும் பணம் தங்குவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நம்முடைய ஊழ்வினை கிரக கோளாறு இவற்றை எல்லாம் தாண்டி பணத்தை ஈர்த்துக் கொள்ளும் தன்மை நம்மிடம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

பண வரவு அதிகரிக்கவும் பணம் கையில் தங்கி வீண்விரயம் ஆகாமல் இருக்கவும், உழைப்போடு சேர்த்து ஒரு சில தாந்த்ரீக பரிகாரங்களையும் செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன மாதிரியான பரிகாரம் என்பதை இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணம் கையில் தங்க கிராம்பு பரிகாரம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களில் தெய்வ அனுகிரகம் மிக்க பொருட்கள் பல உள்ளது. அதில் ஒன்று தான் சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பு. இந்த கிராம்புக்கு பணத்தை ஈர்க்கக் கூடிய ஆகர்சன சக்தி அதிகம் உள்ளது. ஆகையால் தான் இந்த பரிகாரத்தை நாம் கிராம்பை வைத்து செய்யப் போகிறோம். இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டியது இல்லை.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய சிகப்பு நிற துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உடையாத முழு கிராம்பாக பார்த்து ஏழு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சிகப்பு நிற துணியில் கிராம்பை வைத்து சிறிய முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை நீங்கள் கட்டும் போதும் வைக்கும் போதும் யாரும் பார்க்கக் கூடாது. நீங்களும் யாரிடமும் சொல்லக் கூடாது இது ரகசிய பரிகாரம்.

நீங்கள் கட்டிய இந்த முடிச்சை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். அதை பீரோவாக இருக்கலாம் அல்லது உங்களது மணி பர்ஸ் போன்றவற்றிலும் வைக்கலாம். பர்ஸில் வைக்கும் போதும் யார் கண்ணிலும் படக் கூடாது. வியாபாரம் செய்பவர்கள் கல்லாப் பெட்டியிலும் இதே போல செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த கிராம்பை இப்படி கட்டி வைத்தால் பணவரவு அதிகரிக்குமா என்ற கேள்வி எழலாம். கிராம்பை மட்டும் கட்டி வைத்துவிட்டால் நிச்சயம் பணவரவு அதிகரிக்காது. நீங்கள் எப்பொழுதும் போல உங்களுடைய முயற்சியை செய்து கொண்டே இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது பணவரவிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் வாங்கும் யோகத்தை பெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்க

அதே சமயம் வந்த பணம் வீண்விரயம் ஆகாமல் கையில் தங்கும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே அதுவே சேமிப்புக்கு சமம். இந்த கிராம்பு பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -