இந்த ஒரு பொருளை வீட்டில் மறக்காமல் வாங்கி வச்சுக்கோங்க. அவசர தேவைக்கு, பணம் அப்பப்போ கைக்கு வந்து கொண்டே இருக்கும்.

cash1
- Advertisement -

அவசரத் தேவைக்கு கையில் பணம் இல்லை என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு கவலை வந்துவிடும். அவசர தேவைக்கு எப்போதாவது கையில் பணம் இல்லை எனும் போது இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். அதற்காக தினம் தினம் அவசர தேவை இருக்கிறது. தினம் தினம் இந்த பரிகாரத்தை செய்யலாமா என்றால் கேட்டால், நிச்சயம் செய்யக்கூடாது. பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த பிரச்சனையும் வராது. பரிகாரத்தை செய்தால் பணம் தான் வராது. ஏனென்றால் நம்முடைய உண்மையான அவசர தேவை எப்போது, என்பது இந்த பிரபஞ்சத்திற்கு நன்றாகவே தெரியும். பிரபஞ்சத்திடம் பொய் சொல்லி பரிகாரத்தை செய்யும் போது நிச்சயமாக பலன் நமக்கு கிடைக்கப் போவது கிடையாது.

அன்றாட செலவுக்கு கையில் பணம் இல்லை என்றால் அது நீங்கள் செய்யக்கூடிய தவறு. அன்றாடம் உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப சம்பாதிக்க, முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். சும்மாவே அமர்ந்திருந்தால் யார் கையிலும் காசு வராது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது. அவசரமாக ஒரு மருத்துவ செலவு அல்லது கல்யாண செலவு, மேல் படிப்புக்கான செலவு இப்படி ஏதோ ஒரு செலவில் சிக்கிக் கொண்டீர்கள். இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறீர்கள்.

- Advertisement -

இந்த பணம் எனக்கு கிடைத்துவிட்டால், எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து இந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று வேண்டுவோம் அல்லவா, அந்த தருணத்தில் இந்த பரிகாரம் உங்களுக்கு சரியாக கைகொடுக்கும். இது ஒரு ஆன்மீகம் சார்ந்த தாந்த்ரீக பரிகாரம் தான்.

அவசர தேவைக்கு பணம் கிடைக்க பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு கருப்பு உளுந்து தேவை. ஒரு சிறிய பவுலில் இரண்டு ஸ்பூன் கருப்பு உளுந்து போட்டு, அதில் இரண்டு மூன்று இரும்பு ஆணி போட்டு வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் போது நம்பிக்கையோடு பணம் உங்கள் கைக்கு கிடைத்து விட்டதாக நேர்மறையாக நினைத்துக் கொண்டு செய்யுங்கள். இது ஒரு சுலபமான பரிகாரம்தான்.

- Advertisement -

பிறகு உங்களுடைய தேவைக்கு பணத்தை தயார் செய்ய வெளியே கிளம்புங்கள். கடன் வாங்க செல்லலாம் அல்லது தெரிந்தவர்களிடம் பணம் கேட்கலாம், அது உங்களுடைய விருப்பம். இப்படி நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிக்கு தடை வராமல் இந்த பரிகாரம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் கேட்ட இடத்தில் உடனடியாக உங்களுக்கு பணம் கடனாவோ, ஒரு உதவியாகவோ நிச்சயம் கிடைக்கும். (பணம் கிடைத்தவுடன் மூன்று நாள் கழித்து ஆணியை எடுத்து டப்பாவில் போட்டு ஓரிடத்தில் வைத்து விடுங்கள். உளுந்தம் பருப்பை பசு மாட்டிற்கு அல்லது காகத்திற்கு சாப்பிட வைத்து விடுங்கள்.)

பணம் கையில் கிடைத்தவுடன் கடவுளுக்கு ஒரு நன்றியை நீங்கள் சொல்ல வேண்டும். ஒரு அரச மர இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அந்த பிள்ளையாருக்கு தலையில் சின்ன அருகம்புல்லை சொருகி, பூஜை அறையில் வைத்து, விளக்கு ஏற்றி கடன் கிடைத்ததற்கு நன்றியை கடவுளுக்கு தெரிவித்து, இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி தெரிவித்து, இந்த கடனை எப்படியாவது நான் திருப்பிக் கொடுப்பதற்கான வழியை காட்ட வேண்டும் என்று அந்தப் பிள்ளையாரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு பணத்தை எடுத்து செலவு செய்யுங்கள்.

- Advertisement -

ஏனென்றால் கடனை வாங்கி செலவு செய்வது மட்டும் நம்முடைய வேலை இல்லை. நம்மை நம்பி கடன் கொடுத்தவருக்கு சொன்ன நேரத்தில், வட்டியோடு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்கான வழிபாடு தான் இந்த பிள்ளையார் வழிபாடு. பணத்தை திருப்பிக் கொடுக்கக் கூடிய முயற்சிகள் உங்களுக்கு எந்த தடையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மஞ்சள் பிள்ளையார் வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. மிக மிக எளிமையான இந்த இரண்டு பரிகாரங்கள் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது பயன்படுத்தி பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் செலவு செய்யும் 1 ரூபாய் கூட 1000 ரூபாயாக உங்களுக்கு திருப்பி கிடைக்க இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள் போதும். பணம் பல மடங்கு பெருகும்.

நிச்சயமாக இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவ யாருமே இருக்க மாட்டாங்க இல்லையா. அந்த தருணத்தில் இந்த பரிகாரம் கை கொடுக்கும். நம்பிக்கையில் வெற்றி எப்போது கிடைக்கும் தெரியுமா? முழுமையாக ஒரு விஷயத்தை நம்பும்போதுதான். அரைகுறையாக நம்பிக்கை இருந்தால் கூட, பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு மனதோடு செய்தால் கை மேல் பலன் உண்டு என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -