எவ்வளவு டேமேஜான ஸ்கின்னாக இருந்தாலும் 7 நாட்களில் எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்ய இந்த 1 எண்ணெய் போதும். ஆயுசுக்கும் உங்களுக்கு சரும பிரச்சனையே வராது.

face3
- Advertisement -

சருமத்தில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். உங்களுடைய முகம் பொலிவிழந்து காணப்பட கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்கு தெரியாத எந்தப் பிரச்சனை இருந்தாலும் சரி, கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆயுர்வேத கிரீமை தயார் செய்து முகத்தில் அப்ளை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினைக்கும் 7 நாட்களில் தீர்வு கிடைக்கும். முகப்பரு, கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் மறைய இளமையான தோற்றத்தைப் பெற இப்படி நன்மைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இந்த பேக்கை தயார்செய்ய முதலில் நாம் ஒரு எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சிஸ்தா – 5 கிராம், அதிமதுரம் – 5 கிராம், வெட்டிவேர் – 1 சிறிய கொத்து, இந்த 3 பொருட்களும் நமக்கு தேவை. இது மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். மஞ்சிஸ்தா அதிமதுரமும் மரக்கட்டை துண்டுகள் போல இருக்கும். அதை முதலில் சிறிய துண்டுகளாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய பௌலில் 1/4 கப் அளவு நல்லெண்ணெயை ஊற்றி அதில் தயார் செய்து வைத்திருக்கும் மஞ்சிஸ்தா அதிமதுரம் வெட்டிவேர் இந்த மூன்று பொருட்களையும் போட்டு அப்படியே வெயிலில் 3 நாட்கள் வரை காய வைத்து எடுக்க வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து ஸ்டோர் செய்து கொண்டால் பல மாதங்களுக்கு கெட்டுப்போகாது.

இந்த ஆயுர்வேத சத்துக்களை உள்ளடக்கிய எண்ணெய் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு கலர் சேர்க்காத அலோ வேரா ஜெல் போட்டு, 2 ஸ்பூன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த நல்லெண்ணெயை ஊற்றி நன்றாக அடித்து கலக்கினால் வெள்ளை நிறத்தில் ஜெல் போல ஒரு பேக் நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் இரண்டு வாரம் பிரிட்ஜ் இல்லாமலேயே இந்த கிரீம் நன்றாக இருக்கும்.

- Advertisement -

இரவு தூங்க செல்லும் போது முகத்தை சுத்தமாக கழுவி துடைத்துவிட்டு, இந்த ஜெல்லை முகத்தில் ஆங்காங்கே சிறு புள்ளிகளாக வைத்து அப்படியே தேய்த்து மசாஜ் செய்து விட்டு விடுங்கள். க்ரீம் கண்ணுக்கு தெரியாது. முகம் அப்படியே சில நிமிடங்களில் உறிஞ்சிக் கொள்ளும். அப்படியே தூங்க சென்று விடுங்கள். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளலாம். ஏழு நாட்கள் இந்த ஜெல்லை முகத்தில் போடும் போதே நல்ல வித்தியாசத்தை உணர முடியும். தேவைப்பட்டால் இந்த எண்ணெயை முகம் தவிர கை கால்களில் தடவி கொண்டாலும் சருமம் பொலிவாகும்.

பின்குறிப்பு: உங்களால் இந்த எண்ணெயை வெயிலில் காய வைக்க முடியாது என்றால் மிதமான தீயில் இந்த எண்ணெயை அடுப்பில் 5 நிமிடங்கள் நன்றாக சூடு செய்து ஆற வைத்து வடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளலாம். நல்லெண்ணெய் உங்களுடைய சருமத்திற்கு ஒத்துவராது என்றால் நல்லெண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இப்படி வேறு எண்ணெய் வகைகளை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சிஸ்தா, அதிமதுரம், வெட்டிவேர் இந்த 3 பொருட்களை மட்டும் மாற்றக்கூடாது. இந்த மூன்று பொருட்களையும் பொடியாக்க கடையிலிருந்து வாங்கி எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி கூட அந்த எண்ணெயையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -