உங்களை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்று, இதையெல்லாம் நீங்கள் செய்தால் இருக்கும் அழகும் போய்விடும்.

face1
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தோற்றத்தில் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அழகாக அலங்காரம் செய்து கொள்ளலாம். பார்ப்பதற்கு எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்கலாம். ஆனால் எதற்குமே ஒரு லிமிட் உள்ளது. அதாவது வரையறையைத் தாண்டி அளவுக்கு மீறி நாம் எந்த விஷயத்தை செய்தாலும் அது நமக்கு ஆபத்து தான். அமிர்தமாக இருந்தாலும் அதை அளவோடு தான் குடிக்க வேண்டும். அளவுக்கு மீறி குடித்தால் அது நஞ்சாக மாறிவிடும் என்று சொல்லுவார்கள். இதேபோல்தான் அளவுக்கு மீறி நம் வயதையும் தாண்டி, நாம் இளமையாக இருக்க வேண்டும், வயதான தோற்றத்தை வெளியில் காண்பிக்கவே கூடாது என்று சில விஷயங்களை தொடர்ந்து செய்து வரும்போது நமக்கு இருக்கக்கூடிய அழகும் இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி நாம் செய்யக்கூடிய சில தவறுகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair2

தலைமுடி பார்ப்பதற்கு கருப்பாக இருந்துவிட்டால் போதும். 40 வயதாக இருந்தாலும் அவர்களுக்கு வயது 20 என்று சொல்லுவோம். அதனாலேயோ என்னமோ தெரியவில்லை. நரை முடி வெளியே தெரியக் கூடாது என்று தான் நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். இந்த நரைமுடியை மறைப்பதற்காக பெரும்பாலானவர்கள் செய்யக் கூடிய ஒரு விஷயம் மருதாணியை அரைத்து தலையில் பூசிக் கொள்வது.

- Advertisement -

பச்சையாக இருக்கக்கூடிய மருதாணியை அப்படியே அரைத்து தலையில் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் தலையில் இருக்கும் நீர்ச்சத்து அனைத்தையும் அந்த மருதாணி உறிஞ்சிக் கொள்ளும். நம்முடைய தலை ட்ரை ஆகுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அதன் பின்பு இருக்கும் முடி உதிர்ந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மருதாணியை உலர வைத்து பொடி செய்து அதன் பின்புதான் அதை தலையில் போட்டுக் கொள்ள வேண்டும்.

hair-color1

நரைமுடி என்பது அழகுதான் அப்பப்போ அது வெளியில் எட்டிப் பார்த்தால் தவறொன்றும் கிடையாது. எப்போதுமே நரைமுடியை மறைப்பதற்காக ஹேர் டை அடித்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.

- Advertisement -

ஈரத்தோட தலை முடி இருக்கும் போது சீப்பை வைத்து சீவினால் முடி அதிகமாக கொட்டும். அடிக்கடி ஹேர் டிரையர் யூஸ் பண்ணி, தலை முடியை உலர வைப்பதும் முடி உதிர்வுக்கு ஒரு காரணம்.

cobing-hair

ஆனியன் ஆயில் பயன்படுத்தினால் தலைமுடி அதிவேகமாக வளரும் என்பது நிறைய பேரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இருப்பினும் வீட்டில் பச்சையாக இருக்கும் வெங்காயத்தை அரைத்து அப்படியே தலையில் போட்டுக் கொள்வது அவ்வளவு சரியான முறை அல்ல. வெங்காயத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சல்பர் சத்து சில பேருடைய தலைமுடியை கொட்டச் செய்யும். வெங்காயத்தை எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

onion-oil

முகம் பார்ப்பதற்கு சுருக்கம் இல்லாமல் எப்போதும் வெள்ளையாக அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி பிளீச்சிங் பேஷியல் இவைகளை செய்து கொள்ளக்கூடாது. மாதம் ஒரு முறையோ மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ இப்படிப்பட்ட விஷயங்களை செய்வது நமக்கு நல்லது. மாதத்திற்கு இரண்டு முறை பேஷியல் செய்து கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி செய்தால் சருமத்தில் இருக்கும் இயற்கையான அழகும் குறையத் தொடங்கிவிடும்.

face1

இப்போது இணைய தளங்களில் அழகு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாம் பார்க்கின்றோம், படிக்கின்றோம். தெரிந்து கொள்கின்றோம். அந்த விஷயங்களை எல்லாம் நம் முயற்சி செய்து பார்க்கிறோம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இருப்பினும் நாம் பார்க்கும் விஷயங்கள் படிக்கும் விஷயங்கள் அனைத்தும் நம்முடைய தோலுக்கு, நம்முடைய தலைமுடிக்கு, நம்முடைய சருமத்திற்கு தோதாக வருமா என்பதை ஒருமுறை சிந்தித்துக் கொள்ளுங்கள். எந்த பொருளை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாகவும் கொஞ்சமாக காதுக்கு கீழ் பக்கத்தில் அப்ளை செய்து 48 மணி நேரத்தில் எந்த ஒரு அலர்ஜியும் இல்லாமல் இருந்தால் மட்டும் அதை முகத்திற்கு பயன்படுத்தலாம். அலர்ஜியாக இருக்கிறது அரிப்பு இருக்கிறது என்றால் அந்த விஷயத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

face

கெமிக்கல்ஸ் கலந்து செய்யக்கூடிய சில விஷயங்களை நம்முடைய வீட்டில் நாம் முயற்சி செய்து பார்க்க கூடாது. குறிப்பாக ஹேர் கலரிங் ஹேர் ஸ்டைல் இப்படிப்பட்ட விஷயங்களை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மேலே சொன்ன விஷயங்களில் நீங்கள் ஏதாவது ஒரு சில விஷயங்களை பின்பற்றி வந்தாலும் அதனை உடனே நிறுத்துவது தான் உங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -