இந்த வேசலினை இதுக்கெல்லாம் கூடவா யூஸ் பண்ணுவாங்க? நம்பவே முடியலையே! இத படிச்ச பிறகு உங்களுக்கும் கூட இப்படித் தாங்க தோணும்?.

- Advertisement -

சருமம் வறண்டு போவதற்கு பல காரணங்கள் இருக்கிறது உணவு பழக்கங்கள், தண்ணீர், இப்படி பலவகை காரணங்கள் இருக்கும். ஆனால் அதை சரி செய்ய இந்த வேசலினை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அனைவரும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த வேசலினை வைத்து இதெல்லாம் கூட செய்யலாமா என்பது தான் ஆச்சரியப்படக்கூடிய பல விஷயங்கள் இருக்கிறது. அது என்னென்ன எந்த மாதிரியான பயன்பாட்டிற்குகெல்லாம் இந்த வேசலின் உபயோகிக்கலாம் என்பதை பற்றின பதிவு தான் இது

முதலில் அழகு சம்பந்தமான குறிப்பில் இருந்துதே ஆரம்பிக்கலாம். நெயில் பாலிஷ் போடும்போது நம்மில் பல பேருக்கு சரியாக நகத்தில் மட்டும் வைக்க வராது. நகத்தை சுற்றி விரல்களிலும் வைத்து அதன் பிறகு அதைத் துடைக்கிறேன் என்று நெயில் பாலிசையும் கலைத்து, விரலையும் அசிங்கப்படுத்திக் கொள்வார்கள். அதற்கு நெயில் பாலிஷ் வைப்பதற்கு முன் விரலில் வேசலின் தேய்த்த பிறகு வைத்தால் சரியாக அந்த இடத்தில் மட்டும் வைக்கலாம். அது மட்டும் இன்றி விரலில் பட்டு விட்டாலும் லேசாக துடைத்தாலே நெயில் பாலிஷ் விரலில் ஒட்டாமல் உதிர்ந்து வந்து விடும்.

- Advertisement -

அடுத்து குழந்தைகள் காதில் போட்டு இருக்கும் கம்மலை கழட்டி வைத்து ஒன்று இரண்டு நாட்கள் போடாமல் வைத்து விட்டாலே காதில் ஓட்டை மூடி, அடுத்த முறை கம்மல் போடும் போது வலிக்கும். இது போன்ற சமயங்களில் அங்கு கொஞ்சம் வேசலின் தேய்த்து விட்டு பிறகு கம்மல் போட்டால் வலிக்கவும் செய்யாது கம்மலும் ஈசியாக நுழைந்து விடும்.

அதே போல் உங்கள் கால்களில் பாதம் வெடிப்பு இருந்தால் அந்த இடங்களில் வேசலின் தேய்த்த பிறகு பாத அளவிற்கு ஏற்றபடி இறுக்கமான சாக்ஸை தண்ணீரில் நனைத்து அதை நன்றாக பிழிந்த பிறகு அணிந்து கொண்டால் பாத வெடிப்பு சீக்கிரத்தில் மறைந்து விடும். (இந்த குறிப்பை உடல் குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் பயன்படுத்தும் போது அதிக நேரம் உபயோகிக்க வேண்டாம்).

- Advertisement -

முடிக்கு பயன்படுத்தும் ஹேர் கிளிப் வாங்கிய சிறிது நாட்களில் துருப்பிடித்து மேலிருக்கும் பெயிண்ட் உறிந்து வந்து விடும். இதற்கு நீங்கள் வாங்கி வந்த உடனே, இந்த வேசலினை தடவி வைத்து விட்டால் போதும். எத்தனை நாள் ஆனாலும் ஹேர் கிளிப் புதுசாகவே இருக்கும்.

தலை முடியின் அடியில் வெடிப்பு வருவது என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வருவது தான். ஆனால் அதற்கும் இந்த வேசலினை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை அடிமுடியில் தேய்க்கும் போது அடி முடி வெடிப்பில் வராது. முடிவெடுப்பு வராமல் இருந்தாலே போதுமே முடி நன்றாக வளர்ந்து விடும்.

- Advertisement -

நாள் முழுவதும் உடல் நறுமணத்திற்காக ஏதாவது ஸ்ப்ரே உபயோகிக்கும் போது சிறிது நேரம் வரை தான் அதன் நறுமணம் இருக்கும்.அதன் பிறகு வியர்வை நாற்றம் வர ஆரம்பித்து விடும்.அப்படி இல்லாமல் நறுமணம் நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால் உங்கள் உடலில் கைகளில் கொஞ்சம் வேசலினை தடவி அதன் மேல் கொஞ்சம் ஸ்பிரே அடித்துக் கொண்டால், அதன் மணம் நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

அதே போல் நாம் மணி பர்ஸ் ஹேண்ட் பேக் போன்றவை வாங்கிய சில நாட்களில் ஜிப் பகுதியில் துருயேறி மூடவும், திறக்கவும் சிரமமாக இருக்கும். அது போன்ற சமயங்களில் ஜிப்பில் கொஞ்சம் வேசலின் தடவிய பிறகு பயன்படுத்தினால் புதிதாக வாங்கும் போது இருந்தது போலவே ஈசியாக இருக்கும். திரும்பவும் எந்த பிரச்சனை வராது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ஜீன்ஸ் புதுசாவே இருக்கணும்னா, இதை மட்டும் கண்டிப்பா மறந்தும் கூட செய்யாதீங்க.

இந்த வேசலின் சருமம் வறண்டு போகாமல் இருக்கத்தான் பயன் பயன்படுத்தி நமக்கெல்லாம் பழக்கம். ஆனால் அதை வைத்து இத்தனை விஷயங்களை செய்து கொள்ளலாம் என்பது உங்களுக்கு இந்த பதிவின் மூலம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -