ஏழு மிளகு இருந்தால் போதும் லட்ச லட்சமாய் வாங்கிய கடனும் விரைவில் தீருமே! கடன் தீர சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் என்ன?

cash-bairavar-milagu-deepam
- Advertisement -

ஒரு மனிதன் எது இல்லாமல் இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கிறது. சிறுக சிறுக வாங்கிய கடன் நாளடைவில் பெருக துவங்கி விடும் எனவே கடன் வாங்குவதை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது தான் நல்லது. இப்படி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே செத்துக் கொண்டிருப்பவர்கள் ஏழு மிளகு இருந்தால் இப்படி வீட்டில் பரிகாரம் செய்து பாருங்கள், தீராத கடன்களும் தீரும் என்று நம்பப்படுகிறது. அப்படியான கடன் தீர்க்கும் எளிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கடன்கள் தீருவதற்கு பல்வேறு தெய்வங்களுக்கு பல்வேறு பரிகாரங்கள் செய்வது உண்டு. ஆனால் மிளகை கொண்டு பரிகாரம் செய்யும் பொழுது பைரவருக்கு தான் செய்ய வேண்டும் என்பது நியதி! சனீஸ்வர பகவானுக்கு எப்படி எள்ளு பரிகாரம் செய்வது உண்டோ, அதே போல பைரவ பகவானுக்கு மிளகு பரிகாரம் செய்தால் தீராத பிரச்சனைகள் தீர்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

- Advertisement -

பைரவருக்கு மிளகு மூட்டை கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத கடன்கள் தீருவதாக நம்பிக்கை உண்டு. இதை தேய்பிறை அஷ்டமி திதியில் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் நம் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய பரிகாரம் தான் இது!

வீட்டில் உக்ரமாக இருக்கக் கூடிய பைரவர் படத்தை வைக்கக் கூடாது. சாந்த ஸ்ரூபமாக இருக்கக்கூடிய ஸ்வர்ண பைரவரை வாங்கி வைக்கலாம். எந்த பைரவரும் ஒருவரே என்பதால் பைரவர் படம் எது இருந்தாலும் பரவாயில்லை. பைரவர் படத்திற்கு முன்பு சனிக்கிழமைகளில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி வையுங்கள்.

- Advertisement -

அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றுங்கள். பின் சிகப்பு நிறத்தில் திரி போட்டு, சிகப்பு நிற மலர்களை பைரவருக்கு சாற்றி வைக்க வேண்டும். சிகப்பு பைரவருக்கு உகந்த நிறம் என்பதால் செவ்வரளி பூக்களை பெரும்பாலும் பைரவருக்கு அணிவிப்பார்கள். சிகப்பு நிறத்தில் எந்த பூக்கள் கிடைத்தாலும் அதை பைரவருக்கு நீங்கள் சூட்டலாம்.

விளக்கு ஏற்றிய பின்பு விளக்கில் ஏழு மிளகுகளை போடுங்கள். பின்னர் மனதார பைரவ பகவானை வழிபடுங்கள். இருக்கின்ற பிரச்சினைகள் யாவும் தீர வேண்டும், மனோபயம் நீங்க வேண்டும், கடன் தீர்ந்து செல்வ செழிப்பு உயர வேண்டும் என்று உங்களுடைய மனதில் இருப்பவற்றை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். மிளகு போட்டு தீபம் இப்படி ஏற்றும் பொழுது பைரவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
நாளை சித்ரா பௌர்ணமி அன்று, முதல் செலவாக, காசு கொடுத்து இந்த 1 பொருளை வாங்கி விட்டால் போதும். உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம், கடன் சுமை இருக்கவே இருக்காது.

அது மட்டுமல்லாமல் பைரவருக்கு மிளகு போட்டு தீபம் ஏற்றும் பொழுது அந்த மிளகானது விளக்கில் கொதித்து எறிவது போல, நம் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், துன்பங்களும் ஒழியும் என்பது நம்பிக்கை. மேலும் வாங்கிய கடன்கள் தீர்ந்து, பகைவர்கள் ஒழிந்து, வருமானம் உயர துவங்கும். இது போல ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தொடர்ந்து மிளகு தீபம் இவ்வாறு ஏற்றி வந்தால் விரைவிலேயே லட்ச லட்சமாய் கடன் இருந்தாலும் அடையும்.

- Advertisement -