கண் திருஷ்டி, கிரக தோஷங்களை போக்கி நன்மைகளை உண்டாக்கும் அற்புத மந்திரம்

bairavar
- Advertisement -

ஒரு மனிதன் பல விதமான செல்வங்களை பெற்றிருந்தாலும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும், எதற்கும் அஞ்சாமையும் இருத்தல் அவசியமாகும். இவைகளில் குறிப்பாக ஏதேனும் ஆபத்து, கண்டங்கள் ஏற்பட்டுவிடுமோ என்கிற மரண பயமே பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கிறது. இவையனைத்தையும் தீர்த்து வாழ்வில் நன்மைகளை உண்டாக்க வல்ல தெய்வமாக பைரவர் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய பைரவர் மூல மந்திரம்

swarna bairavar

பைரவர் மூல மந்திரம்

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்
ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம

- Advertisement -

காக்கும் கடவுளான பைரவரின் மூல மந்திரம் இது. அமாவாசை அன்று காலை அல்லது மாலை வேளையிலும், வாரத்தின் எந்த கிழமையிலும் வரும் ராகு காலத்தின் போது பைரவரின் சந்நிதியில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, இத்துதியை 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடுவதால் எப்படிப்பட்ட கண்திருஷ்டிகளும் நீங்கும். நமக்கு ஏற்படும் வீணான மனக்கவலைகள் நீங்கும். துஷ்ட சக்திகள் நம்மையும், நம்மை சார்ந்தவர்கள் மற்றும் நமது இல்லத்தை அணுகாது. ஆபத்துகள், கண்டங்கள் ஏற்படாமல் காக்கும் அது பைரவர் நவகிரகங்களை தன்னகத்தே கொண்டவர் என்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களின் தாக்கம் குறைந்து வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.

kaala bairavar

பைரவர் வழிபாடு

- Advertisement -

மூவுலகங்களையும் அச்சுறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய தெய்வம் தான் பைரவ மூர்த்தி. மொத்தம் 64 வகையான போகிறவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனினும் இவற்றில் அஷ்ட பைரவர்கள் மட்டுமே பக்தர்களால் அதிகம் வணங்கப்படுகின்றனர். வாழ்வில் ஏற்படும் கஷ்ட நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பைரவரை மனதில் நினைத்து வணங்க அனைத்தும் நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.

kaala bairavar

பைரவர் வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

பைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

kaala bairavar

பைரவர் வழிபாடு பயன்கள்

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும். தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்.

இதையும் படிக்கலாமே:
எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bairavar moola mantra in Tamil. It is also called as Bairava mantras in Tamil or Moola mantras in Tamil or Mantra to remove dhosham in Tamil or Bairavar manthirangal in Tamil.

- Advertisement -