வேண்டுதலை நிறைவேற்றும் பாலா திரிபுரசுந்தரி வழிபாடு

bala valipadu
- Advertisement -

சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்ற வாசகம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு சக்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. சக்தி இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. அப்படிப்பட்ட சக்தியை நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும் குழந்தை ரூபமாக இருக்கக்கூடிய பாலா திரிபுரசுந்தரியை எப்படி வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சக்தியை பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். பல பெயர்களை வைத்து வழிபடுகிறோம். அதற்கு ஏற்றார் போல் பல வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வருகிறோம். விரத முறைகள், மந்திர ஜெபங்கள் என்று பலவாறு சக்தி தேவியை நாம் வழிபடுகிறோம். ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றி பயன் அளிக்கிறோம். அந்த வகையில் நாம் நினைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதற்குரிய வழிப்பாட்டு முறையை பார்ப்போம்.

- Advertisement -

குழந்தை ரூபமாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வமாக திகழக்கூடியவள் தான் பாலா திரிபுரசுந்தரி. குழந்தை வரம் இல்லாதவர்கள் தங்கள் குழந்தையாக இந்த தெய்வத்தை பாவித்து வாழ்ந்து வந்தாலே விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு அற்புதமான சக்திவாய்ந்தவளாக இவள் திகழ்கிறாள். இவளை நாம் தொடர்ந்து 48 நாட்கள் வழிபட்டால் நம்முடைய எப்பேர்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதலை நிறைவேற்றும் அற்புதமான தெய்வமாக திகழ்கிறாள்.

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று துவங்க வேண்டும். வீட்டில் பால திரிபுரசுந்தரியின் படம் இருந்தால் அதை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு படம் இல்லாத பட்சத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி அந்த தீபச்சுடரொளியில் பாலா திரிபுரசுந்தரியை ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். முதலில் விநாயகப் பெருமானை நினைத்து பூஜை எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்று வழிபட வேண்டும். அடுத்ததாக குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக பாலா திரிபுரசுந்தரியின் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அவள் குழந்தை அல்லவா? அவளுக்கு பிடித்தது போல் இனிப்பு வகைகளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மாதுளம் பழத்தை வாங்கி அதன் முத்துக்களை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த முத்துக்களை வைத்து பாலா திரிபுரசுந்தரிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது அவளின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்
மந்த்ர ரூபின்யை நமஹ
மந்த்ரான் மிகாயை நமஹ
பாலா திரிபுரசுந்தரியை நமஹ

- Advertisement -

இந்த மந்திரத்தை 108 முறை கூறி மாதுளம் பழம் முத்துக்களால் அவளை அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு அர்ச்சனை செய்த அந்த மாதுளம் பழ முத்துக்களை எடுத்து நாமும் சாப்பிட்டுவிட்டு அருகில் இருக்கக்கூடிய குழந்தைகள் அனைவருக்கும் அந்த மாதுளம் பழத்தை தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

பாலா திரிபுரசுந்தரியை மனதார நினைத்து வழிபடும் அனைவருக்கும் அவள் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

- Advertisement -