மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

perumal2
- Advertisement -

செல்வந்தர்களாக மாற வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் எல்லோராலும் நினைத்த மார்பகத்தில், பணம் காசு சம்பாதித்து விட முடியாது. நினைத்தவுடன் கோடீஸ்வரனாக மாற முடியாது. எல்லாவற்றிற்கும் நேரமும் காலமும் கைகூடி வர வேண்டும். அந்த நேரத்தையும் காலத்தையும் நாம் தேடி செல்வதில் எந்த தவறும் கிடையாது. இது மார்கழி மாதம்.

பணக்கார யோகம் பெற இதுவும் ஒரு நல்ல நேரம்தான். இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், நம்முடைய பண கஷ்டம் தீரும். பணக்கஷ்டம் தீர மார்கழி மாதம் சனிக்கிழமை பெருமாள் கோவில் எந்த பொருளை வாங்கி எடுத்துச் செல்வது, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மார்கழி மாதம் சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

மார்கழி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த அவல் வாங்கிக் கொள்ளுங்கள். நாம் எல்லோருக்கும் தெரியும் கிருஷ்ண பரமாத்மா, குசேலரின் கதை. ஏழையாக இருந்த குசேலன் தன்னுடைய நண்பர் கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரு கைப்பிடி அவலை பாசமாக வாங்கிக் கொடுத்தார். அந்த அவலை பிரசாதமாக சாப்பிட்ட கிருஷ்ண பரமாத்மா, குசேலர் வீட்டில் செல்வ மழையை பொழியச் செய்தார். இதே தான் நமக்கும்.

மார்கழி மாதம் சனிக்கிழமை அவல் வாங்கி எடுத்துச் சென்று, அதை பெருமாளுக்கு நிவேதனம் செய்யுங்கள். தேவைப்பட்டால் இந்த அவலில் கொஞ்சம் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொருளை பெருமாளுக்கு வாங்கி வைத்து நெய்வேத்தியம் செய்து விட்டு, பெருமாளிடம் உங்கள் பண கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பெருமாளுக்கு துளசி வாங்கிச் செல்லவும். மகாலட்சுமி தாயாருக்கு தாமரைப்பூ வாங்கிச் செல்லவும். வழிபாட்டை முடித்துவிட்டு நெய்வேத்தியத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள். அந்த அவலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கவும். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் அந்த பிரசாதத்தை சாப்பிட்டு கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பணப்பிரச்சனை தீர வெற்றிலை பரிகாரம்

மார்கழி மாதம் சனிக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் பணம் கஷ்டம் தீரும். குசேலரை போல கோடி கோடியாக செல்வ மழையில் நனைய, நமக்கு அந்த பெருமாள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், நம் பண கஷ்டத்தை தீர்த்து வைக்க நிச்சயம் ஒரு வாய்ப்பை காட்டிக் கொடுப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -