இந்த 2 பொருட்களையும் முறைப்படி இப்படி பயன்படுத்தினால், உங்கள் தலையில் இருக்கும் வழுக்கையில் 15 நாட்களில் வித்தியாசத்தை காணலாம்.

- Advertisement -

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு தலைமுடி அடர்த்தியாக இருந்தால் தான் அழகு. வயது முதிர்ந்த நிலையில் முடி கொட்டும் என்ற நிலைமை மாறி, மாறிவரும் இந்த காலகட்டத்தில் இளமை காலத்திலேயே பல பேர் தங்களுடைய முடியை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் நம் உண்ணும் பொருட்களில் ஊட்டச்சத்து இன்மையும், சுற்றுப்புற சூழல் மாசு கேடும் தான் காரணம். என்ன செய்வது? நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

valukkai

சூழ்நிலைக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு நம்முடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை தான். இதன் அடிப்படையில் தலையில் சிலபேருக்கு வழுக்கை விழும் நிலைமை உண்டாகி விடுகிறது. சில பேருக்கு வகுடு கூட எடுக்கவே முடியாது. வகுடு எடுத்து தலை முடியை இரண்டாக பிரித்தால், வழுக்கை தான் தெரியும். இந்த நிலைமையில் தலை வாருவது மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைக்கு சுலபமான முறையில் ஒரு தீர்வினை காணலாம். அது என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

உங்களால் முடிந்த அளவிற்கு இலசான பச்சை கறிவேப்பிலையை தினம்தோறும் சாப்பிட்டுப் பழகுங்கள். முடியாதவர்கள் கருவேப்பிலை சட்னி அரைத்து சாப்பிட வேண்டும். தினம்தோறும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடவேண்டும். அல்லது இவை மூன்றையும் ஜூஸ் போட்டு குடித்தாலும் பரவாயில்லை. நெல்லிக்காயை தினம்தோறும் சாப்பிடுவது நல்லது. முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர மற்ற கீரைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது இயற்கையான உணவு முறை. இவைகளெல்லாம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடியும் நன்றாக வளரும்.

அடுத்ததாக நாம் குறிப்பிற்கு சென்று விடுவோம். முதலில் ஐந்து கொத்து கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள் பச்சை கரு வேப்பிலையாக இருக்க வேண்டும். அதை காம்புகளில் இருந்து உருவி, மிளகு சீரகம் பூண்டு இடிப்பதற்காக வீட்டில் சிறிய குழவை வைத்திருப்போம் அல்லவா? அதில் போட்டு அந்த பச்சை கருவேப்பிலைகளை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

- Advertisement -

அதன் பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கப் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, அந்த தேங்காய் எண்ணெயில் இந்த கருவேப்பிலை விழுதை போட்டு 3 நிமிடங்கள் காயவிட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் காயவைக்கவேண்டும். அதன்பின்பு அந்த எண்ணையை ஆறவைத்து, வடிகட்டி, முடியின் வேர் பகுதியிலும், உங்கள் மண்டையோட்டிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

men-hair

உங்களுக்கு வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் நீங்கள் வகுடு எடுப்பீர்கள் அல்லவா? அந்த இடத்தில் நன்றாக உங்கள் கையில் எண்ணையை எடுத்து வைத்து மசாஜ் செய்து பாருங்கள். குறிப்பிட்டு அந்த இடத்தில் முடி வளர்வதை உங்களால் காண முடியும். இது நீங்கள் வித்தியாசத்தை உணர வேண்டும் என்பதற்காக. மற்றபடி தலை முழுவதுமாக இந்த எண்ணையை தேய்த்து வரவேண்டும்.

- Advertisement -

bathing

ஒரு மணி நேரம் கழித்து, ஷாம்பு போட்டோ, சியக்காய் போட்டோ நீங்கள் எப்படி தலைக்கு குளிப்பீர்களோ அதே போல் தலையை சுத்தம் செய்துவிட வேண்டும். அவ்வளவுதான். 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை செய்து வாருங்கள். அதன் பின்பு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்தால் போதுமானது. நீங்களே வழுக்கை விழுந்த இடத்தில் வித்தியாசத்தை நன்றாக காண முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக நீக்கிவிடலாம்! நிரந்தர தீர்வைத் தரும் குறிப்பு.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Valukkai thalai mudi valara tips in Tamil. Valukkai thalai mudi valara. Mun netriyil mudi valara tips. Valukkai mudi valara tamil tips. Valukkai thalaiyil mudi valara.

- Advertisement -