பேங்க் பேலன்ஸ் அதிகரிக்க வேண்டுமா? பாஸ்புக்குடன் சேர்த்து இந்த 1 பொருளை வையுங்கள். எடுக்க எடுக்க அக்கவுண்டில், பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

guru
- Advertisement -

வருமானம் வந்து கொண்டே இருந்தால், செலவு செய்வதற்கு யாருக்கும் கஷ்டம் இருக்காது. வருமானத்தை விட, செலவு அதிகரிப்பதால் தான் நமக்கெல்லாம் பிரச்சனை. ஆக உங்களுடைய வருமானத்துக்கு தகுந்த செலவை செய்து பழகுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. அப்போதுதான் கடன் வாங்காத வாழ்க்கையை வாழ முடியும். வருமானத்திற்கு மீறி கடன் வாங்கி செலவு செய்து விட்டால் அது நம்முடைய நிம்மதியை கெடுத்து விடும். ஜாக்கிரதை. அகலக்கால் வைக்காதீங்க.

வங்கியில் இருப்பு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சேமிப்பில் இருந்து செலவு செய்தாலும் கூட, அடுத்தடுத்து நமக்கு வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஒரே ஒரு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு. கஸ்தூரி மஞ்சள் சக்கை கிடைத்தாலும் சரி, கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கிடைத்தாலும் சரி, அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வங்கி சம்பந்தப்பட்ட கணக்குகளை எல்லாம் ஓரிடத்தில் வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த வங்கி புத்தகத்தின்(பாஸ்புக்) மேலே இந்த கஸ்தூரி மஞ்சளை எப்போதும் வையுங்கள். நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால், வரவு செலவு கணக்கு எல்லாம் எழுதுவதற்கு புத்தகம் வைத்திருப்பீர்கள் அல்லவா, அதன்மேலும் இப்படி ஒரு மஞ்சள் கிழங்கை வைக்கலாம்.

இந்த கஸ்தூரி மஞ்சளில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் நல்லதொரு நேர்மறை ஆற்றலை கொடுத்துக் கொண்டே இருக்கும்.  வங்கி கணக்கிலும் பணம் சேரும். வருமானம் அதிகாரிக்கும். தொழிலில் லாபம் பெருகும். அதாவது உங்களுடைய சேமிப்பு பெருகிக்கொண்டே இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க கொடுக்கல் வாங்கலில் சில பேருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே வரும்.

- Advertisement -

வட்டிக்கு கடன், வங்கியில் கடன், நகை கடன், சொத்தின் மீது கடன், பத்திரத்தின் மீது கடன், இது மட்டுமல்லாமல் கொடுத்த கடனை வசூல் செய்வதிலும் சில பேருக்கு பிரச்சனை இருக்கும். எந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, கொடுக்கல் வாங்கலில் இருக்கக்கூடிய சிக்கலை தீர்ப்பதற்காக செல்வீர்கள் அல்லவா, அந்த வில்லங்கங்களை சரிபார்க்க செல்லும்போது உங்களுடைய கையோடு ஒரு கஸ்தூரி மஞ்சளை எடுத்துச் செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: பைரவர் பாதங்களில் வைத்த இந்த பொருளை தினமும் நெற்றியில் வைத்தாலே போதும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கெட்ட சக்தி, கண் திருஷ்டி, என்று எதுவுமே உங்கள் பக்கத்தில் நெருங்காது.

கனமான கடன் பாரத்தை கூட கரைக்கக் கூடிய சக்தி இந்த கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள இந்த சின்ன பரிகாரத்தை வியாழகிழமை அன்று செய்வது மிக மிக சிறப்பு. அதாவது வியாழக்கிழமை அன்று மஞ்சளை எடுத்துக்கொண்டு போய் பாஸ்புக் உடன் சேர்த்து வையுங்கள். பணம் சம்பந்தப்பட்ட வில்லங்கமான விவகாரங்களை சரி செய்ய வியாழக்கிழமை அன்று கஸ்தூரி மஞ்சளை கையில் எடுத்துக்கொண்டு சென்றால், கிடைக்கக்கூடிய பலன் ரொம்ப ரொம்ப நல்லதாக இருக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் சீக்கிரம் பிறக்கும். குரு பகவானை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். குரு பகவானுக்கு உகந்த மஞ்சள் பரிகாரம் உங்கள் வாழ்வில் மங்கலத்தை உண்டு பண்ணும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -