பைரவர் பாதங்களில் வைத்த இந்த பொருளை தினமும் நெற்றியில் வைத்தாலே போதும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கெட்ட சக்தி, கண் திருஷ்டி, என்று எதுவுமே உங்கள் பக்கத்தில் நெருங்காது.

bairavar
- Advertisement -

இந்த கலியுகத்தில் கண்கண்ட கடவுளின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மேல் நாம் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கிறது. அந்த பயமே நமக்கு பிரச்சனையாக முடிகிறது. கடவுளை நம்பியவர்களுக்கு நிச்சயமாக எந்த ஒரு எதிர்மறை ஆற்றலின் மூலமாக பிரச்சனை வராது. அடுத்தவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நாம் செய்யக்கூடிய செய்வினையோ அல்லது ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளோ, ஒரு சில நாட்களில் திரும்பவும் வந்து நம்மையே தாக்கும். நீங்கள் அடுத்தவர்களுக்கு வெட்டிய குழியில், நீங்களே விழுந்துடுவீங்க. ஆகையால் எக்காரணத்தைக் கொண்டும் இந்த பிளாக் மேஜிக் என்று சொல்லப்படும் மாந்திரீகம்  பக்கம் போகவே போகாதீங்க. அது பெரிய ஆபத்தை கொடுத்து விடும்.

சரி, என்னதான் சொன்னாலும் மனதை திருப்தி அடையவில்லை. இந்த எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க ஏதாவது பரிகாரம் இருக்கிறதா, என்பவர்களுக்காக ஒரு சிறப்பான சுலபமான ஆன்மீக ரீதியான பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அந்த சிவன் கோவிலுக்கே காவல் தெய்வமாக நிற்பவர் தான் பைரவர். இந்த உலகத்தையும் பாதுகாக்க கூடிய வேலையும் பைரவருக்கு தான் இருக்கிறது. காவல் தெய்வமாக நிற்கும் பைரவரை நம் குடும்பத்திற்கும், நமக்கும் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என்று வேண்டி அழைக்கலாம். எப்படி என்றால் கடையிலிருந்து புனுகு வாங்கி கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும்.

அதை வாங்கி கொண்டு போய் பைரவருக்கு சாத்தும் படி அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். நீங்கள் வாங்கிய புனுகை அபிஷேகம் செய்யும்போது பைரவரின் மேல் தடவி, மீண்டும் அதை எடுத்து டப்பாவில் போட்டுக் கொடுத்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் அந்த புனுகை பைரவரின் பாதங்களில் வைத்து எடுத்தாலும் சரி, பைரவரின் ஆசிர்வாதத்தை அந்த புனுகு பெறவேண்டும். பைரவருக்கு புனுகு என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

- Advertisement -

உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து அந்த புனுகை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும். பூஜையறையில் வைத்து விடுங்கள். தினமும் குளித்து முடித்துவிட்டு புனுகை எடுத்து உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொண்டால், உங்களுக்கு அது பாதுகாப்பு அரணாக இருக்கும். எந்த ஒரு கெட்ட சக்தியாலும் உங்களை எதுவும் செய்ய முடியாது. பைரவா எங்கள் வீட்டையும் என்னையும் பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லி புனுகை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் புழக்கம் அதிகரிக்து செல்வ வளத்துடன் வாழ வேண்டுமானால், முதலில் இதை தான் செய்ய வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் மட்டுமல்ல உங்களின் சந்ததியினர் கூட செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

தினமும் இதை செய்து வந்தாலே எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் வராது. எந்த ஒரு எதிர்மறை ஆற்றலினாலும் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்கோ எந்த தடையும் ஏற்படாது. எதிரி தொல்லை இருக்காது. சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக வாழ்வதற்கு இந்த சின்ன பரிகாரம் போதும்.

- Advertisement -