பார்லி கஞ்சி குடித்து வந்தால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

- Advertisement -

உலக அளவில் மனிதர்கள் உண்ணும் பிரதான உணவு தானியங்களாக அரிசி, கோதுமை இருக்கிறது. இதற்கு அடுத்த அளவில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியம் வகையாக பார்லி தானியம் இருக்கிறது. இந்த பார்லியை தமிழில் பார்லி அரிசி அல்லது பார்லி தானியம் என அழைப்பார்கள். மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பார்லி அரிசி அல்லது பார்லி தானியங்களை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பார்லி அரிசி பயன்கள்

உடல் எடை
உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

- Advertisement -

புற்று நோய்கள் தடுப்பு

பார்லி தானியங்களில் எந்த வகையான புற்றுநோய்களையும் தடுக்கக்கூடிய ஆற்றல் மிகுந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பார்லி தானியங்களை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீன நாட்டின் யுனான் மாகாணம் மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்பட வில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

- Advertisement -

எலும்பு, பற்கள் வலிமை

பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைந்து இருப்பதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

பித்தப்பை கற்கள்

நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

பீட்டா – குளுக்கான்

பார்லி தானியங்களில் பீட்டா குளுகான் சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பீட்டா குளுக்கான் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் பெருகச் செய்து, நோய்கள் சுலபத்தில் பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் வைட்டமின் சி சத்தும் இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை பன்மடங்கு வலுவடைகிறது. காயங்கள், புண்கள் வேகமாக ஆறவும் வழி வகை செய்கிறது.

செரிமான கோளாறுகள்

செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த பத்திய உணவாக பார்லி இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. தினமும் பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவோ அல்லது பார்லி கஞ்சி பருகுவது வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்ற பெண்களுக்கு சிறந்த போஷாக்குகள் நிறைந்த உணவாக பார்லி திகழ்கிறது. பார்லி கஞ்சி தினமும் பருகும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவுகள் எளிதில் செரிமானம் ஆகிறது. மேலும் பேறு காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கர்ப்பகால நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் பார்லி தானியம் கொண்டிருக்கிறது. கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மை படுத்தும் பணியை பார்லி சிறப்பாக செய்கிறது.

ரத்த சோகை

ரத்தத்தில் சிகப்பு இரத்த அணுக்கள் குறையும் பொழுது அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு வைட்டமின் 12 சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பார்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி குடிப்பவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் காக்கிறது. உடலுக்கு வலிமையையும் தருகிறது.

மலட்டுத்தன்மை

ஆண், பெண் இருவரில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதும் ஒன்றாக இருக்கிறது. பார்லியில் அர்ஜினைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, குழந்தைப்பேறு கிடைக்க செய்கிறது. பெண்களின் கருப்பையில் உள்ள அதிக அளவு கருமுட்டை உற்பத்தியாகும் உதவுகிறது.

சரும பாதுகாப்பு

மனிதர்களின் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு தானியமாக பார்லி இருக்கிறது. பார்லி கஞ்சி அருந்துபவர்கள் மற்றும் பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படும். தோல் சுருக்கம், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தோலின் நிறத்தை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. பார்லி மாவை நீரில் கலந்து பிசைந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைகிறது.

இதையும் படிக்கலாமே:
பரட்டை கீரை நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Barley payangal in Tamil. It is also called as Barley kanji payangal in Tamil or Barley kanji nanmaigal in Tamil or Barley nanmaigal in Tamil or Barley arisi payangal in Tamil.

- Advertisement -