உங்கள் முகத்தில் லேசான கோடுகள் வர ஆரம்பிக்கிறதா? கண்ணிற்க்கு அடியில் சுருக்கம் விழுகிறதா? இவற்றை உடனே சரி செய்ய, உங்கள் முகத்தை ஹீரோயின்கள் போன்று அழகாக வைத்துக் கொள்ள அற்புதமான கிரீமை இந்த ஒரே பொருளில் தயார் செய்யலாம்

face
- Advertisement -

இப்பொழுது இருக்கும் தலைமுறையினருக்கு அதிகப்படியான பிரச்சனைகள் இருக்கின்றன. சிறுவயதிலேயே அவர்கள் அதிகமாக யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக இருந்தார்கள். ஆனால் இப்போது அப்படியில்லாமல் விளையாட்டு என்பதையே மறந்து விட்டார்கள். படிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. படித்து முடித்து விட்டால் வேலை தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வேலைக்கு சென்றால் அங்கு போட்டிகள் அதிகமாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த சுற்றுச்சூழலும் பெருமளவில் ஆபத்தை கொடுக்கிறது. இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து கொண்டிருப்பவர்களுக்கு 20 வயதைக் கடந்த உடனேயே பல பிரச்சனைகள் வந்து விடுகின்றன. அதிலும் யோசனை அதிகமாக செய்பவர்களுக்கு சீக்கிரத்திலேயே முகச் சுருக்கம் வந்துவிடுகிறது. இது வயதானவர்கள் போன்ற தோற்றத்தை கொடுக்கக் கூடியது. முகம் எப்போதும் சோர்வாகவே இருக்கும், இவற்றை சரி செய்தால் மட்டுமே நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாருங்கள் இந்தப் பிரச்சனையை சரி செய்யும் இந்த அற்புத க்ரீமை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை உடனே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரியாணி இலை – 10, சோளமாவு – இரண்டு ஸ்பூன், அலோ வெற ஜெல் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 10 பிரியாணி இலையை சுத்தமாக கழுவி, ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த கிண்ணத்தை வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பிரியாணி இலையுடன் சேர்த்த இரண்டு டம்ளர் தண்ணீர் நன்றாக கொதித்து ஒரு டம்ளர் தண்ணீர் அளவாக மாறும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இவை நன்றாக கொதித்து முடித்ததும் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த தண்ணீரை ஆறவைத்து, அதனுடன் 2 ஸ்பூன் சோள மாவை சேர்த்து, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் இந்த கரைசலை கிண்ணத்தில் சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். இப்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் இந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும். இவை கெட்டியாகி ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

பின்னர் இதனை நன்றாக ஆறவைத்து, ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு இவை நன்றாக குளிர்ந்த பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் அலோ வேரா சேர்த்து 5 நிமிடம் கலந்து கொண்டிருக்க வேண்டும். பிறகு இந்த கிரீமை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே காயவிடவும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டால் போதும். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்துவர உங்கள் முகத்தில் இருக்கும் சோர்வு, சுருக்கம் அனைத்தும் மறைந்து மிகவும் அழகாக தெரிவீர்கள்.

- Advertisement -