ராக்கெட் வேகத்தில் உங்களுடைய முடியை வளர்க்க சமையலறையில் இருக்கும் இந்த 1 இலை போதும்.

hair14
- Advertisement -

முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்தி, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு இனி அதிகமாக செலவு செய்ய வேண்டாம். நிறைய காசு கொடுத்து எண்ணெய் வாங்கி தேய்ப்பது, ஷாம்பு வாங்கி போடுவது போன்ற எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள். முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் நம்முடைய மயிர்கால்களில் வேர்ப் பகுதி உறுதியாக இல்லாமல் இருப்பதுதான். நம்முடைய வேர் பகுதியை வலிமையாக மாற்றி, முடி உதிர்வை உடனடியாக நிறுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க எளிமையான முறையில் ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த குறிப்புக்கு சமையலறையில் இருந்து நாம் பயன்படுத்தப் போகும் அந்தப் பொருள் பிரியாணி இலை. பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் இந்த பிரியாணி இலை இருக்கும். அதில் 5 லிருந்து 6 பிரியாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய சிறிய துண்டாக உங்கள் கையாலேயே கிழித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அதில் இந்த பிரியாணி இலைகளை போட்டு, 2 ஸ்பூன் அரிசியைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு இந்த தண்ணீரை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு நன்றாக சூடு ஆறிய பின்பு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் வரை இந்த தண்ணீர் கெட்டுப்போகாமல் இருக்கும்.

இதை எப்படி நம்முடைய தலைக்கு பயன்படுத்துவது. தலையில் முடியை பகுதி பகுதிகளாக பிரித்து முதலில் ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி, அதாவது வேர்க்கால்களில் இந்த தண்ணீர் நன்றாக படும்படி, ஸ்பிரே செய்ய வேண்டும். அதன் பின்பு முடியின் கீழ்ப்பகுதி வரை ஸ்ப்ரே செய்துவிட்டு, முடியின் வேர்க்கால்களில் இரண்டு நிமிடங்கள் வரை உங்கள் இரண்டு கையை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு முடியை ஒரு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை அலசிக் கொள்ளலாம். வாரத்தில் 3 நாட்கள் இப்படி செய்து வர, ஒரே ஒரு வாரத்திலேயே முடி உதிர்வதில் இருக்கும் வித்தியாசத்தை உங்களால் உணரமுடியும். அதிகப்படியாக 4 வாரம் தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய முடி வளர்ச்சியில் உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.

இந்த குறிப்போடு சேர்த்து உங்களுடைய முடி வளர்ச்சிக்கு இன்னும் ஒரு சில குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக நெல்லிக்காய், ஆரஞ்சு பழம், முருங்கை கீரை பேரிச்சம்பழம், வேர்கடலை, தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட வேர்கடலை உருண்டை, எள்ளுருண்டை இவைகளை சாப்பிடுவது மிக மிக நல்லது. இதோடு சேர்த்து உங்களால் முடிந்தவரை நிறைய தண்ணீரை பருகி வாருங்கள். சீக்கிரமே உங்களுடைய முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும். மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -