உங்கள் கையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். தேவையற்ற மன பயம் நீங்கும். துணிச்சலும் சுறுசுறுப்பும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

kappu
- Advertisement -

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஆன்மீக ரீதியான சில நல்ல தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகளை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நீங்களே எதிர்பார்க்காத பல நல்ல மாற்றங்களை பெறுவீர்கள். குறிப்புக்கு செல்வோமா.

kappu1

முதல் குறிப்பு: சிலபேர் எப்போதுமே பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள். சத்தமாக பேச மாட்டார்கள். வெளியில் சென்று சக மனிதர்களுடன் பேசி பழக மாட்டார்கள். இதைத் தொட்டால் பயம் அதை தொட்டால் பயம் என்று வீட்டிற்குள்ளேயே முடங்கி நடுங்கிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சில பேர் தேவையில்லாத கற்பனையை தங்களுடைய மனதிற்குள் எதிர்மறையாக வளர்த்துக்கொண்டு, மனநிம்மதி இல்லாமல் தவித்து வருவார்கள்.

- Advertisement -

இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வலது கையில் சில்வரினால் செய்யப்பட்ட காப்பினை அணிந்து கொள்ள வேண்டும். சில்வர் என்றால் வெள்ளி அல்ல. எவர்சில்வர் என்று சொல்லப்படும் உலகத்தில் விற்கப்படும் காப்பை வாங்கி வலது கையில் அணிந்து கொண்டு பாருங்கள். இந்தக் காப்பை அணிந்த சில நாட்களிலேயே உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தெரியும். மன தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள்.

pasu

இரண்டாவது குறிப்பு: இப்போதெல்லாம் நிறைய பேர் தங்களுடைய பிறந்த நாள் திருமண நாள் அன்று ஆசிரமங்களுக்கு முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்குவது, ஆதரவற்றவர்களுக்கு புதியதாக துணிமணிகள் எடுத்துக் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள். இது மிக மிக நல்ல விஷயம் தான். தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும் இதோடு சேர்த்து உங்களால் முடிந்தவரை வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

- Advertisement -

நிறைய இடங்களில் கோசாலைகள் இருக்கின்றன. அங்கு இருக்கும் பசு மாட்டிற்கு தீவனம் வாங்கி கொடுப்பது. அந்த கோசாலையை பராமரிப்பதற்கு தேவையான பண உதவியை செய்வது, போன்ற நல்ல விஷயங்களை, நாம் செய்யும் போது வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் சுப காரிய தடையும் நீங்கும். வீட்டில் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. இதையும் கொஞ்சம் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

sleepless

மூன்றாவது குறிப்பு: நிறையபேருக்கு இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இரவு தூங்கும் போது உங்களுடைய தலைமாட்டில் ஒரு டம்ளர் தண்ணீரை திறந்தபடி வைத்துவிடுங்கள். அதன் பின்பு தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த டாலரில் இருக்கும் தண்ணீரை கொண்டு வீட்டிற்கு வெளியே கொட்டி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்து பாருங்கள். எங்கிருக்கும் தூக்கமும் உங்கள் கண்களை தழுவும்.

kagitha-poo

நான்காவது குறிப்பு: இன்றைய சூழ்நிலையில் வாகனங்களில் விபத்து ஏற்படாமல் பயணம் செய்வது என்பது மிக மிகக் கடினமான விஷயம் என்று ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் விபத்து. நீங்கள் வாகனம் ஓட்டுபவர்கள் ஆக இருந்தாலும் சரி, வாகனத்தில் அடிக்கடி செல்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டிலிருந்து கிளம்பும்போது ஒரு காகித பூவை எடுத்து உங்களுடைய பாக்கெட்டிலோ, பர்சிலோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

murugar1

இதோடு சேர்த்து காக்கும் கடவுளான முருகப் பெருமானை மனதார நினைத்து ‘வேலும் மயிலும் துணை’ என்ற வார்த்தையை உச்சரித்து வீட்டிலிருந்து கிளம்பினால் விபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -