வெறும் பத்தே நிமிடத்தில் பர்மனென்ட்டாக வெள்ளையாக மாற, இதை விட ஈசியான ஐடியாவை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. உங்க கலருக்கு முன்னாடி வெள்ளைக்காரன் கலர், தோற்றுப் போகும்னா பாருங்க.

face9
- Advertisement -

மாநிறமான சருமத்தைக் கொண்டவர்கள், கொஞ்சம் கருப்பான சருமத்தை கொண்டவர்களுக்கு தங்களுடைய தோல் இன்னும் கொஞ்சம் வெள்ளையாக மாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். இதற்காக பல செயற்கையான கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டன்ட் ஆக வெள்ளையாக தெரிவதற்கு, ஏதாவது விசேஷங்களுக்கு செல்லும்போது, முகத்தில் இரண்டு கோட்டிங், மூன்று கோட்டிங் மேக்கப் போட்டு செல்வார்கள். ஆனால் அது எல்லாமே சருமத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்கள் தான். சருமத்தை உடனடியாக வெள்ளையாக மாற்றுவது என்பது கொஞ்சம் ஆபத்தான விஷயம். அது பிற்காலத்தில் உங்களுக்கு பக்க விளைவுகளை கொடுத்து விடும். எந்த ஒரு ஒயிட்னிங் கிரீமையும் வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்து, சோதித்து விட்டு, பிறகு வாங்கி பயன்படுத்திக் கொள்வது நல்லது.

சரி வெள்ளையாக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கருத்துப்போன முகத்தை எப்படி பளிச்சென மாற்றலாம். இயற்கையான முறையில் எத்தனையோ அழகு குறிப்புகள் நமக்கு இருந்தாலும், இங்கு நாம் இந்த பதிவில் பார்க்கக்கூடிய அழகு குறிப்பு உங்களுக்கு ஒரு பெஸ்ட் ரிசல்ட்டை 10 நிமிடத்தில் கொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அழகு குறிப்பு என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் வெள்ளை நிறத்தை கொடுக்கும் அழகு குறிப்பு:
இதற்கு நமக்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம்.‌ பாதாம் பருப்பு 10 லிருந்து 15, பேரிச்சம் பழம் 2, பால் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், முல்தானி மெட்டி 1 டேபிள் ஸ்பூன், இந்த நான்கு பொருட்கள்தான். முந்தைய நாள் இரவே ஒரு சின்ன கிண்ணத்தில் பாதாம் பருப்பை போட்டு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதில் கொட்டை நீக்கிய இரண்டு பேரிச்சம் பழங்களை போட்டு ஊற வைத்து விடுங்கள்.

எட்டு மணி நேரம் இது அப்படியே ஊறட்டும். மறுநாள் காலை எழுந்து இதை ஊற வைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் ஊற்றி விழுதாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பு எந்த அளவுக்கு அரைபடுமென்று நமக்கு தெரியும் அல்லவா. முடிந்தவரை நைசாக அரைத்து எடுத்துக்கோங்க. ஒரு பேக் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அதில் பால் பவுடர் 1 ஸ்பூன், முல்தானி மெட்டி 1 ஸ்பூன், போட்டு கலந்தால் திக்கான பேஸ்ட் தயார். இதை தான் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். மேக்கப் இல்லாமல் முகத்தை கழுவி விட்டு இந்த பேக்கை முகம் கழுத்து பகுதியில் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் எடுக்கும். பிறகு முகத்தை ஈரம் செய்து கொண்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து முகம் கழுவிய பின்பு வரக்கூடிய மாற்றத்தை நீங்களே கண்ணாடி முன்பு பாருங்கள்.

இதே போலத்தான் சன்டேன் ஆகி கருத்துப்போன இடங்களில் எல்லாம் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். சன்டேன் இரண்டே நாட்களில் முழுமையாக உங்கள் சருமத்தை விட்டு போய்விடும். அதேபோல கருத்துப்போன கை, கால் முட்டி பகுதியில் கூட இந்த பேக்கை நீங்கள் அப்ளை செய்யலாம். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை உபயோகப்படுத்தலாம்.  உங்கள் முகத்தில் ரொம்பவும் முகப்பரு இருக்கிறது. ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் என்பவர்கள் ஒரு பேச் டெஸ்ட் எடுத்துவிட்டு இதை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -