முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி சகல சௌபாக்கியதோடு வாழ நாம் கோவிலுக்கு செல்லும்போது இதை செய்தாலே போதும்.

vijayalakshmi-temple
- Advertisement -

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் பிறப்பிற்கு காரணம் அதன் முற்பிறவியில் செய்த கர்மவினைகளே! நாம் ஒரு பிறவியில் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் மறுபிறவி எடுக்கிறோம். மேலும் அந்த பிறவியில் ஏற்படுகின்ற துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகள் தான் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட கர்ம வினைகளை போக்குவதற்கு நாம் கோவிலுக்கு செல்லும் போது இதை செய்தாலே போதும்.

பிரதட்சணம் என்பது நமது அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கும் ஒரு செயல். அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பிரதட்சணம் என்பது நமக்கு அறிமுகமான செயல் தான். சூரியனை நாம் வாழும் பூமி பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறது. நம் பூமியை சந்திரன் பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கையே ஒரு பிரதட்சணம் தான்.

- Advertisement -

பிறப்பு முதல் இறப்பு வரை, காலை முதல் மாலை வரை. பிரதட்சணம் இல்லை என்றால் நம் வாழ்வில் எதுவும் நடைபெறாது. அப்படிப்பட்ட பிரதட்சணத்தை, நாம் கோவிலில் செய்யும்போது நம்முடைய முற்பிறவியின் கர்ம வினைகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். அதேபோல் மறுபிறவி ஏற்படாத வண்ணம் நம்மை காக்கும்.

கோவிலை பிரதட்சணம் செய்வதில் எண்ணிக்கைகள் இருக்கின்றது. 1,3,5,9,11, 21, 48, 108, 1008 என்ற எண்ணிக்கை அடிப்படையில் நாம் கோவிலில் பிரதட்சணம் செய்யலாம். எந்த அளவுக்கு அதிகமாக நாம் கோவிலை பிரதட்சணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய கர்ம வினைகள் குறைந்து கொண்டே செல்லும்.

- Advertisement -

திருவிளையாடலில் ஞான பழத்திற்காக உலகத்தையே சுற்றி வந்தார் முருகர். ஆனால் விநாயகரோ தாய் தந்தையான பரமேஸ்வரன் பார்வதியை சுற்றி வந்து அந்த ஞானப்பழத்தை பெற்றார். இந்த கதை அனைவரும் அறிந்த கதையே. இந்த கதையின் முக்கியமான தத்துவம் பரமேஸ்வரனையும் பார்வதியை பிரதட்சணம் செய்ய செய்ய நம்முடைய கர்ம வினைகள் குறையும் என்பதே.

இன்றளவும் பழங்கால கோவில்களில் சித்தர்களும், முனிவர்களும் சூட்சம வடிவில் இறைவனை பிரதட்சணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஒரு வேண்டுதல் நமக்கு நிறைவேற வேண்டுமென்றால் 108 முறை கோவிலை பிரதட்சணம் செய்தாலே, அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வம் நிறைவாக சேர இந்த ஒரு மரத்தை உங்கள் கையால் நட்டுவைத்தால் போதும். மரம் வளர்வதை போல செல்வமும் வளரும்.

பல இடங்களில் இந்த பிரதட்சணம் செய்வதை பரிகாரமாகவும் மேற்கொள்கின்றனர். நாம் பிரதட்சணம் செய்வதால் நம்முடைய முற்பிறவி கர்மவினைகள் கரைவதோடு மட்டுமல்லாமல் மறுபிறவி நிகழாது என்று சொல்லப்படுகிறது. நாமும் நம்மால் இயன்ற அளவு பிரதட்சணம் செய்து நம்முடைய பிறவி கர்ம வினைகளை தீர்த்துக் ஆன்மீக நெறியோடு வாழ்வோம்.

- Advertisement -